திருநெல்வேலி மட்டுமல்ல உங்கள் ஊரிலும் இந்த கொடுரம் நடந்திருக்கும்..! காரணம் யார்..?

1 338

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவிலுள்ள அயன்திருவாலீஸ்வரம் (காக்கநல்லூர்) கிராமம்.

தமிழகத்தில் நீர் நிலைகள் அனைத்தும் குடிமராமரத்து திட்டத்தின் மூலம் தூர்வாரப்படும் என சமீபத்தில் தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்து இருக்கிறார்.
அதன் படி எங்களது ஊரில் உள்ள செண்பகராமபேரி குளத்தில் சுமார் பதினைந்து லட்சம் ரூபாய் செலவில் மராமத்து பணிகள் நடைபெற்றதாக பொதுப்பணித்துறையில் இருந்து விளம்பர பலகை வைத்து உள்ளார்கள்.

ஆனால் துரதிஷ்டம் யாதெனில் எங்களது குளத்தில் ஒரு புல்லை கூட கிள்ளி போடவில்லை என்பதே நிதர்சனம்
மாறாக குளத்தின் கரை செம்மை படுத்தப்பட்டதாகவும், மதகுகள் சரி செய்யப்பட்டதாகவும் விளம்பர பலகையில் குறிப்பிட்டு உள்ளார்கள்.
அவர்கள் பலகை குறிப்பிட்ட நாட்களில் மனித சக்திகள் கொண்டு எந்த வேலையும் நடைபெறவில்லை. அதன் புகைபடங்களை கீழே இணைத்துள்ளேன். ஒரு பாதி அளவு ரூபாயாவது செலவழித்து விட்டு இவ்வாறு கணக்கு காட்டியிருந்தால் கூட மனது ஆறிவிடும்.

ஆனால் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் 7284 மனித சக்திகள் இவ்வேலையை செய்ததாக குறிப்பிட்டுள்ளதை நினைத்தால் மனது வெடிக்கிறது. கண்முன்னே இப்படியொரு பகல்கொள்ளை நடப்பதை நினைத்து வேதனையாக இருக்கிறது.
இப்படித்தான் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் தூர்வாரி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
எனக்கு முகநூலில் எனக்கு பெரிய நட்பு வட்டம் கிடையாது. எனவே ஐயா அவர்கள் தயவுகூர்ந்து இச்செய்தியை தங்களது பக்கத்தில் பதிவிட வேண்டுகிறோம்

ஊர்பொதுமக்கள்

 

 

உங்கள் ஊரிலும் இது போன்ற முறைகேடுகள் நடந்தால் ஆதாரத்துடன் அனுப்புங்கள் எங்களால் முடிந்த மாற்றத்தை கொண்டு வருகிறோம்..!

You might also like
1 Comment
  1. Aram Sei Thamizha says

    https://www.facebook.com/AramSeiThamizhaa/posts/367212750410507
    https://www.facebook.com/AramSeiThamizhaa/posts/365949720536810
    https://www.facebook.com/AramSeiThamizhaa/posts/363449880786794

    Please refer the above links, which is having a enough details about the Dusi Village issue.
    2.72 crore has been looted by the politicians for the past 4 years.. All the proofs are available in my FB

Leave A Reply

Your email address will not be published.