திராவிட இலையை தொடர்ந்து திராவிட சூரியன் மறைந்தது..!

0 211

“தலைவா”

உம்மைத் தவிர இதுவரை நான் யாரையும் “தலைவா” என்று சொன்னதில்லை…

காரணம் உம்மைத் தவிர யாருக்கும் நான் தொண்டனாய் இருந்ததில்லை…

உமது கரகரத்த குரலில் “உயிரிலும் மேலான”… எனச் சொல்லும்போது என்னைத்தான் சொல்வதாய் நினைத்து, மயிர்கள் சிலிர்த்து நிற்கும்…

கைதட்ட நீ அவகாசம் கொடுக்கும்போது காரணமின்றி கண்களில் நீர் முட்டி நிற்கும்…

நீ எங்கெங்கு பேசினாலும் அங்கெல்லாம் வந்து நிற்பேன் அது ஒரு காலம்…

உம்மைத் தொட்டுவிடும் தூரத்தில் நின்ற மதுரை “டெசோ” மாநாடு நினைவுகள் இன்னும் துளிகூட அழியாமல் என் மனசுக்குள் இருக்கிறது…

பள்ளிக் காலத்தில் எந்தக் காரணத்திற்காக ஈர்க்கப்பட்டு உம்மிடம் வந்தேனோ, அந்தக் காரணத்திற்காவே நான்விலகியும் வர வேண்டியதாகிவிட்டது…

எமது உறவுகள் வேரறுக்கப் படும்போது, இருவருமே சாட்சியாக இருந்திருக்கிறோம்…

எமக்கு இயலாமை; உமக்கு முயலாமை”

நீண்டநாட்கள் கழிந்து மீண்டும் உம்மை தலைவா எனச் சொல்ல ஆசை,

” போய்வா தலைவா”

என்றும், எதிலும் நீ பிரமிப்புதான்…

இன்றைக்கு மட்டுமல்ல இனி என்றைக்கும் இயற்கையின் தொண்டனாக மட்டும்,

பதிவு : Ramamurthi Ram

இறுதியாக இறந்த உனக்கும் ஒன்றை கூற ஆசைப்படுகிறேன் தமிழனாக

ஊர்ல பாதி இடம் திருடி அடிச்சு வாங்கி போட்டாலும் ஆறடி நிலத்துக்கு பிச்சை எடுக்க வெச்சது பாரு காலச்சக்கரம்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.