தமிழ்த் தாய் முலையில் தார் ஊற்றும்
எட்டு வழிச் சாலை.
எங்கள் சேலத்தில் – அதை
ஏலம் எடுத்தவன் யார் ?
ஏர் பிடித்த கைகள்
ஏந்தி நிற்குமோ
எவர் போடும் பிச்சைக்கு.
ஐயா எடப்பாடி ! – எங்கள்
பயிர் வாடிப் பற்றி எரிந்தால்,
நம் உயிர் நாடி இருக்காது.
உழவன் மகனே – நான்
கிரண் பேடி கேட்கவில்லை
கிழவி கேட்க்கின்றேன் ?
எமை அழித்து, எட்டு ஊருக்கு போவது
எந்தக் கோட்டையில் இளைப்பாற ?
ஏலம் எடுக்கும் சேலத்து மண்
ஏலக்காய் என நினைத்தீரோ ?
அவை எங்கள் பரம்பரை நிலங்கள்.
பசுமை பொழியும் பண்பட்ட நிலங்கள்.
பாடையில் போனாலும்
பணத்துக்காய் பல்லிளியோம்.
author : பகீரதன் கற்பனைகள்