சமூக விழிப்புணர்வு

அனைத்திற்கும் வெளிநாட்டை காரணம் காட்டும் இந்திய அரசாங்கமே இந்த பகல்கொள்ளையும் காட்டலாமே..!

By பாரதி

June 19, 2018

எதற்கு எடுத்தாலும் வெளிநாடு வளர்சியடைகிறது நாம் அடைய வேண்டாமா என்று கூவுபவர்களே..?

கொள்ளை லாபமா… மிதமான லாபமா?’ தலையங்கம் நாட்டுமக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக உள்ளது. மருந்து உற்பத்தித் துறையைக் கட்டுப்பாடின்றி பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்துவிட்டதன் விளைவுதான் இந்தப் பகல்கொள்ளை.

பகல்கொள்ளையைத் தடுக்க மருந்து விலை நிர்ணய ஆணையம் அமைக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் மேலை நாடுகளை உவமை காட்டும் நம் அரசியல்வாதிகள் மேலை நாடுகளில் மருத்துவம் சார்ந்த துறைகள் அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன என்பதை மறந்தது ஏன்?

மதுக்கடை அரசிற்கு மருந்துக்கடை தனியாருக்கு வல்லரசை நோக்கி இந்தியாவாம்..!