நினைவு

நமக்கோ ஏழாவது நாளில் தான் அடி விழுந்தது ….. அவர்களுக்கோ முதல் நாளில் தலையில் குண்டு விழுந்தது ….

By பாரதி

May 17, 2018

உன்னையும் என்னையும் போலத்தான் அவர்களும் இருந்தார்கள் …..

நீயும் நானும் ஜல்லிக்கட்டு மாட்டுக்காக கூடினோம் அல்லவா ….!!!!

அதே போல் அவர்கள் தங்கள் தாய் நாட்டுக்காக கூடினார்கள் ……

நமக்கோ ஏழாவது நாளில் தான் அடி விழுந்தது ….. அவர்களுக்கோ முதல் நாளில் தலையில் குண்டு விழுந்தது ….

எப்படி நாம அடிவாங்கிய போது நமக்காக கேக்க நாதியற்று நின்னோமோ அப்படி தான் அவர்களும் நின்றார்கள் …..

அப்பாவப்பட்ட கூட்டத்தில் ஒரு சிறுவன் மட்டும் சீறினான் “அவர்களை திருப்பி அடிக்கோனம் “என்று …. 14 வயதில் குண்டு வைக்க கற்றுக்கொண்டான் ,17 வயதில் துரோகிகளை களையெடுக்க ஆரம்பித்தான் …

அச்சிறுவனின் புகைப்படமோ , அடையாளங்களோ சிங்கள இரானுவத்திடம் இல்லை ….

சிங்கள அரசு தமிழர் தேசம் முழுவதும் சுவரோட்டி அடித்தது “பிரபாகரன் தலைக்கு 10 லட்சம் சன்மானம்” என …

தமிழர் கூட்டமோ அந்த சுவரோட்டியை வேறு கோணத்தில் நோக்கியது பிரபாகரன் தலைக்கு என்பது பிரபாகரனே எம் தலைவர் என மாறியது …..

அந்த ஒற்றை தலைவனின் கீழ் ஒட்டுமொத்த தேசமும் கூடியது ….

புறநானூற்று வீரத்தை நிகழ்காலத்தில் நிகழ்த்தி காட்டியது விடுதலை புலிகள் சேனை ….

ஜெனிவா ,கனடா,ஐரோப்பா நாடுகள் விடுதலைப்புலிகளை தமிழர் பிரதிநிதியாக அழைத்து பேசியது …. அவர்கள் அங்கே தனியொரு நிழல் அரசாங்கத்தை நடத்திருந்தார்கள் …

திருடர்கள் இல்லாத தேசம் ,பிச்சைகாரர்கள் இல்லாத தேசம் என ஓன்றை உருவாக்கினார்கள் …..

திருகோணமலை துறைமுகத்தை 25 ஆண்டுகளுக்கு அமெரிக்க இராணுவ தளமாக குத்தகைக்கு கேட்டது ..அது தன் தந்தை தேசமான இந்தியாவிற்கும் தொப்புள் கொடியான தமிழகத்திற்கு பாதிப்பை உருவாக்கும் என நிராகரித்தார் பிரபாகரன் …

சர்வதேசத்துடனான முரண் மூண்டது சிங்களத்திற்க்கு ஆதர்வான நிலைப்பாட்டை எடுத்து இருந்தது ஐ.நா …

இறுதி போர் தொடங்கியது, 33 நாடுகள் ஒரு ஆதி இனத்தை அழிக்க உதவி புரிந்தது ….

தங்கள் தந்தை நாடு என கருதிய இந்தியமோ ஓரு படி மேல் சென்று இராணுவ தளவாடங்களும் வீரர்களையும் சிங்களத்துக்கு தந்தது …. அதற்கு துனையாக திராவிடம் நின்றது ..

மே 16, 17, 18 _2009 போர் உக்கிரம் பெற்றது …தடை செய்யப்பட்ட இராசயன குண்டுகள் தமிழ் மக்கள் மீது கொட்டப்பட்டது …. மூன்றே நாட்களில் 1750000 மக்கள் கொன்று புதைக்கப்பட்டார்கள் …

ஒரு இயக்கத்துக்கு எதிரான போர் என சொல்லி ஒரு இனத்தையே அழித்தி முடித்து விட்டனர் ….

அழித்த சிங்கள இனம் அவன் தலைவனான இராஜபக்சே வை மூன்றே ஆண்டுகளில் தூக்கிவிசியது ….

அழிக்கப்பட்ட இனத்தின் தலைவனான பிரபாகரன் இன்றும் போற்றப்பட்டு கொண்டு தான் இருற்கிறார்கள் …

ஆம்… அதுவே எம் இனம் ..கடைசி தமிழன் வாழும் வரை தமிழீழம் வாழும் ….

#தமிழ்_இனப்படுகொலை_நாள்_மே_18 #Tamils_genocide_day_may_18