பெரு ம் பா லும் நா ன் நடி க் கும் பட ங்க ளை நா னே பார் க்க மாட் டே ன் ..!! அதை யும் மீ றி பார் த்தா ல் அவ் வள வு தா ன் ..!! பேட் டி யில் வெ ளிப்ப டையா க கூ றிய பிர பல நடி கை ..!!

0 531

தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் .ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ரஜனிமுருகன், தொடரி, ரெமோ ,பைரவா, தானா சேர்ந்த கூட்டம் போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் .

அது மட்டுமில்லாமல் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான மகாநடி என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றார் நடிகை கீர்த்தி சுரேஷ் . இதைத்தொடர்ந்து நடித்துவந்த இவரின் பெரும்பாலான படங்கள் தோல்விப் படமாகவே அமைந்தது . அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான அண்ணாத்த , சர்க்கார் வாரி பட்டா போன்ற திரைப்படங்கள்,

மோசமான விமர்சனங்களை பெற்றது . இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்திருந்த கீர்த்தி சுரேஷ் கூறியதாவது , எப்போதும் என்னுடைய நடிப்பு எனக்கு திருப்தி அளிக்காது.  நடிப்பின் மீது இருக்கும் ஈடுபாடு காரணமாக இன்னும் நன்றாக நடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு படத்திலும் என்னுடைய முழு முயற்சியை செய்து வருவேன் .

அப்படி முழு முயற்சியை கொடுத்தாலும் இன்னும் நன்றாக அந்தப் படத்தில் நடித்து இருக்கலாம் என்று என்னுடைய மனம் சொல்லும் .  தன்னை நம்பி படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் எந்தவித கஷ்டமும் ஏற்படக்கூடாது என்றும் கவனமாக இருப்பேன் . பெரும்பாலும் நான் நடிக்கும் படத்தை நானே பார்க்க மாட்டேன் , அதையும் மீறி அந்த படத்தை பார்த்தால்,

நான் செய்திருக்கும் தவறு என் கண் முன் வந்து நிற்கும். இதற்காகவே என்னுடைய படங்களை நான் பார்க்க மாட்டேன் என்று கூறியிருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ் .இப்படி வெளியான தகவலை பார்த்த ரசிகர்கள் அவருடைய படத்தை அவராலையே பார்க்க முடியாது என்றால் எங்களால் மட்டும் எப்படி பார்க்க முடியும் என்று கிண்டல் செய்து வருகின்றனர்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.