தெ றி படத் திற் கு முத லில் வை க்க ப்பட்ட த லை ப்பு இ து தா னா ..!! இ ந்த டை ட் டில் கூ ட நல் லா தா ன் இரு க்கு ..!! பல வரு டங் கள் கழித் து வெளி யா ன சுவா ரி சிய த க வல் ..!!

0 230

தமிழ் சினிமா உலகில் கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தெறி . இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து இருந்தார் .  இந்த திரைப்படம் இயக்குனர் அட்லீயின்  இரண்டாவது திரைப்படமாகும். இந்த படத்தின் வெற்றியால் தொடர்ந்து மூன்று முறை வாய்ப்பு கொடுத்திருந்தார் நடிகர் விஜய் .மேலும் தெறி  படத்தில் விஜய்யுடன் இணைந்த சமந்தா,

எமிஜாக்சன் ,பேபி நைனிகா ,ராதிகா சரத்குமார் ,மகேந்திரன் போன்ற பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார் . இப்படி வெளியான இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது . இந்நிலையில் இந்த படத்திற்கு முதலில் வைத்த தலைப்பு ,

குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில்  இந்த படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் இந்த படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று தெரியாமல் தவித்து வந்துள்ளனர்  படக்குழுவினர். இதன் பிறகு  இயக்குனர் அட்லீ இந்த படத்திற்கு தாறுமாறு என்று ,

டைட்டில் வைத்துள்ளார் . இது எப்படியோ இணையத்தில் கசிந்து விட ரசிகர்களுக்கும் தெரிந்துவிட்டது. பின்னர் ஜி வி பிரகாஷ் குமார் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தாறுமாறு படத்தின் பாடலை தயார் செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார் . இதனால் படத்தின் பெயர் முன்கூட்டியே ரசிகர்களுக்கு தெரிந்ததால்,

படக்குழு அதிர்ச்சி ஆனது . இந்த காரணத்திற்காக தாறுமாறு என்று பெயர் வைத்தால் நன்றாக இருக்காது என்று யோசித்து பின்னர் ஒருவழியாக தெறி என்று பெயரை மாற்றி வைத்தனர். இப்படி வெளியான இந்தத் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.