சம் பந் தமே இ ல்லா மல் மா நாடு பட வா ய்ப் பை நிரா க ரித்த இரண் டு முன் ன ணி நடி கர் கள் ..!! இப் போ து வரு த்த ப்ப ட்டு என் ன பிரோ ஜ னம் ..!! வெளி யா ன த கவ ல் உ ள் ளே ..!! யா ரெ ன்று நீ ங்க ளே பா ரு ங் க ..!!
தமிழ் சினிமா உலகில் கடந்த ஆண்டு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாநாடு. இந்த படத்தில் சிம்பு ,எஸ் ஜே சூர்யா ,கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஏ சந்திரசேகர் போன்ற பல பிரபலங்கள் நடித்து இருந்தனர் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படி வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
குறிப்பாக இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தோடு நடிகர் சிம்புவின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது .ஆனால் இப்படி மாபெரும் ஹிட்டான மாநாடு படத்தின் கதையை இரண்டு ஹீரோக்கள் நிராகரித்துள்ளனர் . அந்த வகையில் மாநாடு படத்தின் கதையை முதலில் சூர்யாவிடம் வெங்கட்பிரபு கூறியிருக்கிறார்.
ஆனால் அப்போது சூர்யா அந்த படத்தை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டாராம் . அதன்பிறகு சூர்யாவை வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வேறு ஒரு கதையை தயார் செய்து எடுத்து இருக்கிறார் வெங்கட்பிரபு . அந்த திரைப்படம் தான் மாஸ். இருப்பினும் மாநாடு திரைப்படத்தை தவறிவிட்டதாக சூர்யா தற்போது வருந்துவதாகவும் கூறப்படுகிறது .
சூர்யாவைத் தொடர்ந்து மாநாடு படத்தின் கதையை அவருடைய தம்பியாகிய கார்த்தியிடம் சொல்லியிருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு . ஆனால் அவரும் இந்த திரைப்படத்தின் கதையை நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது . அதற்கு பதிலாக வெங்கட்பிரபு கார்த்தியை வைத்து பிரியாணி என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான மாஸ் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை . அதுமட்டுமில்லாமல் கார்த்தி நடிப்பில் வெளியான பிரியாணி திரைப்படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை . இவர்கள் ஏன் மாநாடு படத்தின் கதையை நிராகரித்து இந்த படத்தின் கதையை தேர்ந்தெடுத்தார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்…