என் வா ழ்க் கை யில் நா ன் செய்த மிக ப்பெ ரிய தவ று சூர் யா படத்தி ன் வாய் ப் பை தவ றவி ட்டது தா ன் ..!! தற் போ து வரு த்தப் பட்டு வரும் பி ரபல ந டிகை ..!! இ ணைய த் தை கல க் கும் த க வ ல் உ ள் ளே ..!!

0 385

சோனியா அகர்வால் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் நடிகை சோனியா அகர்வால் . பின்னர் இதனைத்தொடர்ந்து கோவில், மதுர, சக்சஸ் போன்ற படங்களில் நடித்து வந்தார் .

குறிப்பாக 7ஜி ரெயின்போ காலனி படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது என்று கூட சொல்லலாம். பின்னர் இந்த படங்களை தொடர்ந்து ஒரு கல்லூரியின் கதை, திருட்டு பயலே ,புதுப்பேட்டை போன்ற பல படங்களில் நடித்து வந்தார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கடந்த 2006ம் ஆண்டு இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டார் நடிகை சோனியா அகர்வால் . பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2010ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.  இதையடுத்து தற்போது நடிகை சோனியா அகர்வால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்த  நடிகை சோனியா அகர்வால் தான் சூர்யாவுடன் நடிக்கும் நல்ல வாய்ப்பை தவற விட்டு விட்டேன் என்று கூறியிருக்கிறார் . அந்த வகையில் கடந்த 2005ஆம் ஆண்டு இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கஜினி .இப்படி வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து அசின் , நயன்தாரா போன்ற  பல பிரபலங்கள் நடித்திருந்தனர் .இந்த படத்தில் நடிப்பதற்கு முதலில் நடிகை சோனியா அகர்வாலுக்கு தான் வாய்ப்பு வந்ததாம் . ஆனால் அந்த வாய்ப்பை இவர் தவற விட்டு விட்டதாக கூறப்படுகிறது. அதை நினைத்து தற்போது நடிகை சோனியா அகர்வால் வருத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.