இ ந்த ஒ ரு விஷய த்திற் காக பாக்ய ரா ஜை அசிங் கப்ப டுத்திய இ ளை ய ராஜா ..!! வெளி ப்ப டையா க கூ றிய பா க்யரா ஜ் ..!! பல வ ருட ங்கள் கழி த்து வெ ளியா ன தக வல் இ தோ ..!!

0 221

தமிழ் சினிமா உலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்தவர் தான் பாக்யராஜ் அவர்கள் . மேலும் அப்போது வெளியான பாக்யராஜின் படங்கள் அனைத்திற்கும் இளையராஜாதான் இசையமைத்திருந்தார் .ஆனால் பாக்யராஜ் நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு படத்திற்கு மட்டும் இவர்களின் கூட்டணி இணையவில்லை . இதற்கு காரணம் அந்த படத்திற்கு பாக்யராஜ் தான் இசையமைத்து இருந்தார் . இதனால் அப்போது இளையராஜா பாக்யராஜ் மீது பெரும் கோபத்தில் இருந்ததாகவும் ,

இப்போதெல்லாம் எல்லோரும் ஹார்மோனி பெட்டியை தொட்டுடறாங்க என்று பாக்யராஜை  இளையராஜா அசிங்கப்படுத்திய தாகவும் சர்ச்சைகள் எழுந்தது . இப்படியொரு  நிலையில் இதுகுறித்து பாக்யராஜ் பகிர்ந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது . அந்தவகையில் அவர் கூறியதாவது, நான் இளையராஜாவுடன் இணைந்து சின்ன வீடு திரைப்படம் வரைக்கும் பண்ணுனேன். 

அடுத்த படம் பண்ணும் போது கொஞ்சம் முன்கூட்டியே சொல்லுங்கள் என்று இளையராஜா கூறியிருந்தார் .பின்னர் நானும் கதை ரெடியான பிறகு அவர் எப்போது சொல்கிறாரோ அப்போது கம்போசிங் வைத்துக்கொள்ளலாம் என்று அவரின் உதவியாளரிடம் கூறினேன். ஆனால் அந்த உதவியாளர் திடீரென்று இளையராஜாவை  வீட்டில் போய் பாருங்கள் என்று கூறினார் .

நான் எதற்கு போய் வீட்டில் பார்க்க வேண்டும் , எப்போதும் நாங்கள் ஸ்டூடியோவில் தான் பார்த்துக் கொள்வோம் .அவர் எப்போது கம்போஸிங் என்று சொல்கிறாரோ அப்போது வைத்துக்கொள்ளலாம் என்று கூறினேன். ஆனால் அந்த உதவியாளர் மீண்டும் மீண்டும் அவரை வீட்டிற்கு போய் பாருங்க என்று கூறினார். பின்னர் நான் இங்கு வந்தேன் என்று சொல்லி விடு,

என்று கூறி விட்டு கிளம்பி விட்டேன் . இளையராஜா நான் கேட்கும் இசையை அருமையாக போட்டுக் கொடுப்பார் .எங்களுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் வந்தது கிடையாது . இந்நிலையில் அவரை வீட்டிற்கு போய் பாருங்க என்று சொன்னதும் எனக்கு கஷ்டமாக இருந்தது . மேலும் உடம்பு எதுவும் சரியில்லை என்றால் சொல்லுங்கள் நான் தாராளமாக வீட்டுக்கு போய் பார்க்கிறேன் .

ஆனால் படம் பண்றதுக்காக ஏன்  வீட்டுக்குப் போய் பார்க்க வேண்டும் என்று கூறிவிட்டேன் .பின்னர் அந்த உதவியாளர் இளையராஜாவிடம் என்ன சொன்னார் என்று தெரியவில்லை .ரொம்ப நாட்களாக அவரும் எனக்கு போன் பண்ண வில்லை.  நானும் அப்படியே விட்டு விட்டேன் . இதன் பிறகு தான் கங்கை அமரன் வந்து நீங்களும் அண்ணனும் ,

ஒண்ணா சேர்ந்து மீண்டும் படம் பண்ணவேண்டும் என்று கூறினார் .அப்போது நானும் ராசுகுட்டி என்ற படத்தை எடுப்பதற்கு தயாராக இருந்தேன் . பின்னர் இளையராஜாவும் இதற்கு சம்மதம் தெரிவித்ததால் ராசுக்குட்டி படத்திற்கு இசையமைத்துக் கொடுத்தார் . பின்னர் அங்கிருந்து மீண்டும் எங்களுடைய பயணம் ஆரம்பமானது என்று கூறியிருந்தார் பாக்யராஜ் அவர்கள்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.