நடி கர் ஜெய் சங் கர் போ ல எந்த வொ ரு சர்ச் சை யிலும் சி க்கா த முன் ன ணி நடி கர் இவ ர் தா னா ..?? பிர பலத் தை பய ன்படு த்தாம ல் எளி மை யாக இ ரு ந்து வ ரும் நடி கர் ..!! இவ ரா என் று ஆச்சி ரிய மான ர சிக ர்க ள் ..!!
தமிழ் சினிமா உலகில் ஒரு காலக்கட்டத்தில் பிரபல நடிகராக இருந்தவர் தான் நடிகர் ஜெய்சங்கர் அவர்கள். இவர் 1965ஆம் ஆண்டு வெளியான இரவும் பகலும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து எம்ஜிஆர் ,சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார் . கிட்டத்தட்ட தமிழில் மட்டும் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் ஜெய்சங்கர் .
மேலும் இவர் வில்லன் கதாபாத்திரம் ,குணச்சித்திர கதாபாத்திரம் என்று அனைத்திலும் கலக்கி கொண்டு வந்தார் . பெரும்பாலும் இவரின் படங்களில் துப்பறியும் கதாபாத்திரத்தில் நடித்து வந்ததால் ரசிகர்கள் இவரை தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்றும் அழைத்து வந்தார்கள் . இப்படி பிரபலமான ஜெய்சங்கர் நடித்து வந்த ,
காலத்தில் எந்த ஒரு சர்ச்சைகளிலும் சிக்காமல் கண்ணியமான மனிதனாக வாழ்ந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . இவரைப் போன்றே எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத இன்னொரு நடிகர் தான் அஜித் அவர்கள் . ஆரம்பத்தில் இவரின் படங்கள் எதுவும் வெற்றி பெறாத நிலையில் தொடர்ந்து,
தனது விடா முயற்சியின் மூலம் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருகிறார் . மேலும் இவர் தன்னுடைய பிரபலத்தை எப்போதும் பயன்படுத்தாமல் மிகவும் எளிமையாகவும் நடந்துகொள்வார். இவர் தற்போது எச் வினோத் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் .
இப்படி பிரபலமான நடிகர் அஜித் இதுவரை எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் அந்த காலத்தில் நடிகர் ஜெய்சங்கர் போல , இந்த காலத்தில் தல அஜித் இருந்து வருகிறார் என்று கூறப்படுகிறது…