என் னை பார்த் தா லே விஜய் சேது பதி ரொ ம்ப பயப்ப டுவா ரு ..!! வெளி ப்ப டையா க கூறி ய பிர பல இய க்கு னர் ..!! அவ ரின் படத் தின் தோல் விக் கு கார ண மே நா ன் தா ன் ..!! வெளி யா ன உண் மை தக வ ல் இ தோ ..!!

0 207

தற்போது தமிழ் சினிமா உலகில் ஹீரோ ,வில்லன் ,குணச்சித்திர கதாபாத்திரம் ,சிறப்பு கதாபாத்திரம் என்று அனைத்திலும் கலக்கி  கொண்டு வருபவர் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் . எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை தத்துரூபமாக நடிப்பவர் தான் விஜய் சேதுபதி . மேலும் அண்மைக் காலங்களாக ஹீரோவை விட அதிகம் வில்லன் ரோல்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி .

அந்த வகையில் ரஜினி மற்றும் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதி தற்போது விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாகவும் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி வெளியாக இருக்கிறது . இதையடுத்து நடிகர் விஜய் சேதுபதி வளர்ந்து வரும் காலகட்டங்களில் பல படங்களில் நடித்து வந்தார் .

அப்படி கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வன்மம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, கிருஷ்ணா, சுனைனா போன்ற பல பிரபலங்கள் நடித்து இருந்தனர் . இந்த திரைப்படத்தை ஜெய் கிருஷ்ணா என்பவர் இயக்கியிருந்தார் . ஆனால் இப்படி வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடையே வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசியிருந்த இயக்குனர் ஜெய் கிருஷ்ணா கூறியதாவது,  இந்த படத்தின் தோல்விக்கான காரணம் நான் தான் . மற்ற நடிகர்கள் அவர்களின் வேலையை சரியாக செய்து இருந்தார்கள் என்று கூறியிருந்தார்.  மேலும் விஜய் சேதுபதி என்னை பார்த்தாலே பயப்படுவார் ,

உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் செய்கிறேன் ஆனால் கால்ஷீட் மட்டும் கேட்காதீர்கள் என்று கூறுவார் . ஒருவேளை இந்த திரைப்படம் தோல்வியடைந்ததால் அப்படி பேசுகிறாரா என்பது தெரியவில்லை,  இருந்தாலும் பல படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டு தான் வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி என்று கூறியிருந்தார் இயக்குனர் ஜெய் கிருஷ்ணா…

You might also like

Leave A Reply

Your email address will not be published.