கா லே ஜ் படிக் கும் போ தே 17 அரி யர் வை த்தி ருந்த சிவகா ர்த்தி கேய ன்..!! கடை சி யில் இ ப் படி தா ன் பா ஸ் ஆ னா ரா ..?? தற் போ து அவ ரே கூறி ய தக வ ல் ..!! என் ன வென் று நீ ங்க ளே பாரு ங் க..!!
தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் . ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் மெரினா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . பின்னர் இதனை தொடர்ந்து மனம் கொத்தி பறவை ,3 ,கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்து வந்தார் .இதனைத் தொடர்ந்து வெளியான எதிர்நீச்சல் மற்றும்,
வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்கள் இவரை மக்களிடையே பெரிதும் பிரபலமாக்கியது என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு தன்னுடைய கலகலப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார் சிவகார்த்திகேயன் . பின்னர் இதனை தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து வந்தார் சிவகார்த்திகேயன் .தற்போது இவர் நடிகர் மட்டுமல்லாமல் பாடகர் ,
பாடலாசிரியர் ,தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவராக இருந்து வருகிறார் . மேலும் சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான டாக்டர் மட்டும் டான் போன்ற திரைப்படங்கள் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது . குறிப்பாக இந்த இரண்டு திரைப்படங்களும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
இதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் தயாரிப்பில் ஒரு படத்திலும் , ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன் . இந்நிலையில் பேட்டி ஒன்றில் தன்னுடைய கல்லூரி வாழ்க்கை குறித்து பேசிய அவர் கூறியதாவது, நான் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போது 17 அரியர் வைத்திருந்தேன் . அப்போது எந்த விஷயத்துக்கும் அவ்வளவாக பயந்தது இல்லை .
ஆனால் இப்படியே சென்றால் உருப்பட முடியாது என்று யோசித்து என்னுடன் படித்த பெண்களிடம் சொல்லித்தர சொல்லி அதை படித்து தான் அந்த 17 அரியரையும் கிளியர் பண்ணினேன் என்று கூறியிருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன் .அவர் பேசிய வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…