55 வய தில் சா தித் து காட் டிய நடி கை ரே வதி ..!! 39 ஆண் டுக ள் க ழித் து கி டை த்த மிகப் பெரி ய கௌ ரவ ம் ..!! வெளி யா ன லே ட்ட ஸ்ட் தக வல் இ தோ ..!!

0 311

ரேவதி ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார் . 1983 ம் ஆண்டு வெளியான கட்டாதே கிளிக்கூடு என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமான அதே ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண்வாசனை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது . பின்னர் இதனை தொடர்ந்து கை கொடுக்கும் கை,

புதுமைப்பெண் ,வைதேகி காத்திருந்தாள் ,கன்னிராசி, பகல் நிலவு, ஆண்பாவம் போன்ற பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலம் ஆனார் நடிகை ரேவதி . குறிப்பாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் ,மோகன், முரளி ,பிரபு போன்ற பல நடிகர்களுடன் இணைந்து நடித்து இருக்கிறார் நடிகை ரேவதி.

அதுமட்டுமில்லாமல் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பல முறை வென்றிருக்கிறார் நடிகை ரேவதி . இப்படி தொடர்ந்து நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் குணச்சித்திர கதாபாத்திரம் , அம்மா கதாபாத்திரம் என்ற நடிக்க தொடங்கினார் . மேலும் இவர் கடைசியாக தமிழில் வெளியான நவரசா என்ற அந்தாலாஜியில்,

நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் இவர் சமீபத்தில் வெளியான பூத காலம் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார் . இந்த படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.  இப்படி சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு சிறந்த நடிகைக்கான விருதை கேரள அரசு அறிவித்துள்ளது .

இதில் ஆச்சரியம் என்னவென்றால் நடிகை ரேவதி கேரளாவில் பிறந்தவர். கிட்டத்தட்ட சினிமாவில் அறிமுகமாகி 39 ஆண்டுகள் ஆன நிலையில் முதன்முறையாக தன்னுடைய தாய் மொழியில் சிறந்த நடிகைக்கான விருதை பெறுகிறார் நடிகை ரேவதி அவர்கள் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.