இந் த புகை ப்பட த்தி ல் இரு க்கு ம் சிறு வன் யா ரென் று தெ ரிகி றதா ..?? அட, இ வர் தமி ழ் சினி மாவி ன் தவிர் க்க மு டி யாத நடிக ரா ச்சே ..?? வெளி யா ன புகை ப்படத் தை பார் த்து விய ந்து போ ன ரசி க ர்க ள் ..!!

0 191

தமிழ் சினிமாவில் பிரபல மூத்த நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜயகுமார் . இவரின் முதல் மனைவிக்கு பிறந்த மகன் தான் நடிகர் அருண் விஜய் . இவர் கடந்த 1995ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் .பின்னர் இதனை தொடர்ந்து பிரியம் ,கங்கா கௌரி, துள்ளித்திரிந்த காலம் ,அன்புடன், பாண்டவர் பூமி,

இயற்கை ,ஜனனம் போன்ற பல படங்களில் நடித்து வந்தார் . இப்படி தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் இவரால் முன்னணி நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற முடியவில்லை. பின்னர் ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.  பின்னர் கடந்த 2015ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில்,

விக்டர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்திருந்தார் . இந்த திரைப்படம் இவரின் திரை வாழ்க்கையையே புரட்டிப் போட்டது . அந்தளவிற்கு தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் அருண் விஜய் . பின்னர் இதனைத் தொடர்ந்து வெளியான குற்றம் 23 ,செக்க சிவந்த வானம், தடம்  போன்ற பல ஹிட் படங்களை கொடுத்து,

தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார் . மேலும் சமீபகாலமாக அருண் விஜய் தேர்வு செய்து வரும் திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் கூட விஜயகுமார் ,அருண்விஜய் அவரின் மகன் என மூன்று தலைமுறையும் ஓ மை டாக் படத்தில் நடித்திருந்தனர்.  இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது .

இதை தொடர்ந்து தற்போது நடிகர் அருண்விஜய் பார்டர் ,அக்னி சிறகுகள் ,யானை ,பாக்ஸர் ,சினம் போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் . இந்நிலையில் இவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது . அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ  அந்த புகைப்படம் நீங்களும் பாருங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.