தன் னு டைய மக ள்க ளால் இய க்கு னர் ஷ ங்க ருக் கு ஏ ற்பட் ட பெ ரு ம் தலை வ லி ..!! இவரு க் கே இப் படி யொ ரு நிலை மை யா ..?? கோ பத் தில் இரு ந்து வ ரும் ஷ ங் கர் ..!! என்ன வெ ன்று நீங் க ளே பா ருங் க..!!

0 208

தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் தான் இயக்குனர் ஷங்கர் அவர்கள். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த இவர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில்மேன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படி வெளியான முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது . பின்னர் இதனை தொடர்ந்து காதலன் ,ஜீன்ஸ், முதல்வன் ,இந்தியன் போன்ற பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து பிரபலமானார் இயக்குனர் ஷங்கர் .

குறிப்பாக இவரின் படங்களில் இடம்பெறும் பாடல் காட்சிகள் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனால் இப்படி பிரபலமான இயக்குனர் ஷங்கர் தற்போது பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறாராம். அந்த வகையில் இயக்குனர் ஷங்கருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர் .

இதில் மூத்த மகளின் கல்யாணத்திலேயே இயக்குனர் ஷங்கர் பல பிரச்சனைகளை சந்தித்து விட்டார்.  அதுமட்டுமில்லாமல் இந்தியன்2 படத்தின் படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்டு படம் பாதியிலேயே நின்று போனது . இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகளான அதிதி ஷங்கரால்  தற்போது அவருக்கு தலைவலி ஆரம்பித்துள்ளதாம் .

அந்தவகையில் அதிதி சினிமாவில் நடிக்கும் கனவை அப்பாவிடம் சொல்லி இருக்கிறார். அவரும் இவருக்கு உறுதுணையாக நின்று ஒரு படத்தில் மட்டும் நடித்து கொண்டு ஆசையை தீர்த்துக் கொள்ளும்படி கூறியிருக்கிறார்.  இதன்பிறகு முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாக இருக்கும் விருமன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் அதிதி .

ஆனால் அதிதி விருமன் படத்தை தொடர்ந்து இன்னும் நான்கு படங்களில் கமிட்டாகி உள்ளாராம். ஆனால் இந்த விஷயங்கள் எதுவும் இயக்குனர் ஷங்கருக்கு தெரியாதாம்.  அவர் ஒரு படம் நடிப்பதற்கு மட்டுமே அனுமதி கொடுத்த நிலையில் இவர் நான்கு படங்களில் கமிட்டாகி உள்ளது ஷங்கருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.