சினி மாவி ல் நடி க்க ஆசை ப்படு ம் குஷ் பூவி ன் மக ள் ..!! என் னா ல் எது வும் செ ய்ய முடி யா து என் று மறு க் கும் குஷ் பூ ..!! வெளி யா ன தக வலை கண் டு ஆச்சி ரி யமா ன ரசி கர் க ள் ..!!

0 340

தமிழ் சினிமா உலகில் ஒரு காலகட்டத்தில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பு அவர்கள் . மேலும் கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை குஷ்பு . பின்னர் இதனை தொடர்ந்து வருஷம் 16 ,வெற்றிவிழா ,பாட்டுக்கு நான் அடிமை, கிழக்குவாசல் மைக்கேல், மதன காமராஜன், நடிகன் ,சின்னத்தம்பி போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்  நடிகை குஷ்பூ.

அதுவும் குறிப்பாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி ,கமல், விஜயகாந்த், சத்யராஜ் ,கார்த்திக் போன்ற பல நடிகர்களின் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார் நடிகை குஷ்பு. இதன் பிறகு கடந்த 2000ம் ஆண்டு இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர் சி திருமணம் செய்துகொண்டார்.

திருமணமான இவர்களுக்கு அவந்திகா மற்றும் ஆனந்திதா  என்ற இரு மகள்கள் இருக்கின்றனர் . இதில் மூத்த மகளான அவந்திகா லண்டனில் தன்னுடைய நடிப்பு பயிற்சி முடித்து விட்டதாக குஷ்பு சமீபத்தில் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.  மேலும் அவந்திகா தற்போது நடிக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது .

ஆனால் நாங்கள் அவளை அறிமுகப்படுத்தவோ அல்லது பரிந்துரைக்கவோ மாட்டோம்  என்று கறாராக கூறி விட்டார் நடிகை குஷ்பூ . இதற்கு காரணம் அவந்திகா தன்னுடைய திறமையால் மட்டுமே சினிமாவில் வலம் வரவேண்டும் என்று குஷ்பூ நினைக்கிறாராம் . மேலும் சினிமாவில் அவந்திகாவே பட  வாய்ப்புகளை,

தேடிக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் . மேலும் தமிழ் சினிமா உலகில் உள்ள பல பிரபலங்கள் தங்களின் வாரிசுகளை சினிமாவில் அறிமுகம் செய்து வைப்பதற்கு பல கோடிகளை செலவு செய்து வரும் நிலையில் நடிகை குஷ்பூ தன் மகள் திறமையால் முன்னேற வேண்டும் என்று கூறியிருப்பது பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.