பொ து இட த்திலே யே கவு ண்ட மணி யை மன்னி ப் பு கே ட்க சொ ன் ன க மல் ..!! இத ற்கு இப்ப டி யொ ரு கா ரண ம் இரு க் கா ..?? ப ல வரு டங்க ள் கழி த்து வெளி யா ன உண் மை த க வ ல் ..!!

0 138

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது பல வருடங்கள் கழித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இந்த படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில் , நரேன் போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது . இந்நிலையில் அப்போது நடந்த படப்பிடிப்பின் போது கமல்ஹாசன் பிரபல நடிகர் தன்னிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே ,

அந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்று கூறியிருக்கும் சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது . அந்த வகையில் 1992 ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சிங்காரவேலன். இந்தப் படத்தில் கமலுடன் இணைந்து கவுண்டமணியும் நடித்திருந்தார் . அப்போது படப்பிடிப்பின் போது கவுண்டமணியிடம் ரசிகர் ஒருவர் இந்த படத்தில் செந்தில் நடக்கவில்லையா என்று கேட்டுள்ளார் .

அதற்கு பதிலளித்த கவுண்டமணி இந்த படத்தில் வெள்ளை செந்தில் ஒருவர் நடித்திருக்கிறார் . அவர் பெயர் கமல்ஹாசன் என்று கூற அங்கிருந்த அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.  அப்போது இதை கேட்டுக்கொண்டிருந்த கமல் இதை அவமானமாக கருதி பாதியிலேயே படப்பிடிப்பை விட்டு வெளியேறி விட்டாராம். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் தயாரிப்பாளரான,

இளையராஜாவை தொடர்புகொண்டு அங்கு நடந்ததையும் கூறியிருக்கிறார் கமல்ஹாசன்.  மேலும் கவுண்டமணி என்னிடம் மன்னிப்பு கேட்டால் மட்டும் தான் படப்பிடிப்பிற்கு வருவேன் என்று பிடிவாதம் பிடித்து இருக்கிறார் கமல் . பின்னர் இதுகுறித்து கவுண்டமணியிடம் பேசியபோது மன்னிப்பு தானே கேட்கணும்,  நானே கேட்கிறேன் என்று கவுண்டமணி கூறியிருக்கிறார்.

இதையடுத்து மறுநாள் கமல்ஹாசன் படப்பிடிப்பிற்கு வந்து இறங்கியவுடன் பலர் முன்னிலையில் கவுண்டமணி உங்களை வெள்ளை செந்தில்  என்று சொன்னதற்கு என்னை மன்னித்து விடுங்கள் என்று கமல்ஹாசனிடம் மன்னிப்பு கேட்டாராம். இதற்கு  கமல்ஹாசனும் விடுங்க பார்த்துக்கலாம் என்று கூறிவிட்டு படப்பிடிப்பிற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.