சிவ கார் த்தி கேய னுக்கு இருக் கும் குண ம் கூட வடிவே லு க்கு இல் லை போ லை யே ..!! கஷ் டத் தில் தவித்த வ ரை இப்ப டி யா அசிங் கபடு த்துவ து ..?? என்ன வென் று நீ ங்க ளே பா ரு ங்க ..!!
தமிழ் சினிமா உலகில் பிரபல காமெடி நடிகராக இருந்து வந்தவர் தான் வைகைப்புயல் வடிவேலு அவர்கள். ஆரம்பத்தில் இவருக்கு சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அறிமுகப்படுத்தியவர் ராஜ்கிரண் அவர்கள். இதன்பிறகு வடிவேலு மதுரையில் இருந்து வந்ததால் விஜயகாந்த் தான் நடிக்கும் படங்களில் அவருக்கு வாய்ப்பு கொடுத்து வந்தார் . இப்படி தொடர்ந்து நடித்து வந்த வடிவேலு ஒரு கட்டத்தில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கே போட்டியாக இருந்து வந்தார் .
அந்த நேரத்தில் ராஜ்கிரண் பண நெருக்கடியில் அவதிப்பட்டுள்ளார் . அப்போது ராஜ்கிரண் கேட்காமலேயே வடிவேலு 5 லட்சம் அவருக்கு கொடுத்து உதவி செய்துள்ளார் . இப்படி கொடுத்தது மட்டுமல்லாமல் பல சினிமா பிரபலங்களிடம் ராஜ்கிரணுக்கு தான் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதை கூறியிருக்கிறார் .ஆனால் கஷ்டத்தில் இருந்த தனக்கு வடிவேலு,
பணத்தை கொடுத்து விட்டு இப்படி என்னை அசிங்கப் படுத்தி விட்டார் என்று ராஜ்கிரண் பலமுறை வருத்தப்பட்டுள்ளாராம். ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மறைந்த பாடலாசிரியரான நா முத்துக்குமாரின் குடும்பத்திற்கு உதவிகள் செய்து வருகிறாராம் .ஆனால் இதை யாருக்கும் தெரியாமல் மறைமுகமாகத்தான் செய்கிறாராம்.
இதைத் தெரிந்து கொள்வதற்காக பத்திரிக்கையாளர் ஒருவர் சிவகார்த்திகேயனை தொடர்பு கொண்டுள்ளார் . அப்போது சிவகார்த்திகேயன் நான் நா முத்துக்குமார் சார் இறந்த போது அவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருடைய குடும்பத்தை பார்க்கும் போது எனக்கு மன வேதனையாக இருந்தது .அதனால் தான் அவரின் குடும்பத்திற்கு நான் உதவி செய்து வருகிறேன் .
ஆனால் தயவு செய்து இந்த விஷயத்தை மட்டும் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார் . இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயனிடம் இருக்கும் குணம் கூட வடிவேலுக்கு இல்லை போல என்று கூறி வருகின்றனர்…