வார ண ம் ஆயி ரம் படத் தில் சூர் யா விற்கு தங் கை யாக நடி த்த நடி கை யா இ து ..??ஆ ளே அ டையா ளம் தெரி யா த அ ளவி ற்கு மாறிப் போ ன நடி கை ..!! இ ணைய த்தை க லக் கும் லே ட்ட ஸ்ட் புகை ப்ப டம் ..!!
தமிழ் சினிமா உலகில் கடந்த 2008ஆம் ஆண்டு இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வாரணம் ஆயிரம் . இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து சமீரா ரெட்டி ,திவ்யா, சிம்ரன் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இந்த படத்தில் சூர்யாவுக்கு தங்கையாக நடித்து இருந்தவர் தான் நடிகை தீபா நரேந்திரா.
இவர் ஒரு பரதநாட்டிய கலைஞர் ஆவார் . இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் கூறியதாவது, இதுவரை எந்த ஒரு வாய்ப்பையும் நான் தேடிப் போனதில்லை, என்னை நம்பி நீங்கள் பண்ணினால் நன்றாக இருக்கும் என்று தேடி வரும் வாய்ப்புகளை மட்டும் தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்.
குறிப்பாக எனக்கு டான்ஸ் மூலமாக தான் வாய்ப்பு கிடைத்தது . அதை பார்த்துவிட்டு கவிதாலயா கிருஷ்ணன் இந்த கதாபாத்திரத்திற்கு நீங்கள் சரியாக இருப்பீர்கள் என்று சொல்லி ஆடிசனுக்கு கூப்பிட்டு இருந்தார் . நடனம் நடிப்பு எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. அதனால் அது இயல்பாக அவர்கள் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு நடித்தேன் .
உடனே நாளையிலிருந்து படப்பிடிப்பிற்கு வந்து விடுங்கள் என்று கூறினார்கள் . அப்படித்தான் என்னுடைய சின்னத்திரை வாழ்க்கை தொடங்கியது . அப்படி நான் நடித்த முதல் சீரியலை இயக்குனர் சமுத்திரகனி தான் இயக்கி இருந்தார் . அவர் எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்து இருந்தார்.
இதன் பிறகு படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தேன் . இருந்தாலும் என்னை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது வாரணம் ஆயிரம் திரைப்படம் தான். இதன் பிறகு நான் மீடியாவை விட்டு விலகி பல வருடங்கள் ஆகிவிட்டது . இருந்தாலும் கூட என்னை பார்த்துவிட்டு நீங்க தானே,
சூர்யாவுக்கு தங்கச்சியாக நடித்திருந்தீர்கள் என்று கேட்பார்கள் . மேலும் என்னுடைய கணவர் நரேந்திரா. ரொம்ப வருஷம் அவர் கூட சேர்ந்து வொர்க் பண்ணினேன் . அவர் பரதநாட்டியத்தில் என்னை விட சூப்பர் சீனியர் . இரண்டு பேருக்குமே ஒருத்தரை ஒருத்தர் பிடித்துவிட்டது.
பின்னர் வீட்டில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டோம் . எங்க விருப்பப்படியே 12 ஆண்டுகள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் . மேலும் நானும் என் கணவரும் டான்ஸ் க்ளாஸ் எடுத்துட்டு இருக்கோம் .அதுவே அதிகளவில் எங்களுக்கு நிம்மதியை யும் , மகிழ்ச்சியை யும் தருகிறது என்று கூறியிருந்தார் நடிகை தீபா நரேந்திரா…