என் னு டைய வாழ் நாளி ல் டி ராஜே ந் தர் செய் த உத வி யை மட்டு ம் நா ன் மறக் கவே மாட் டே ன் ..!! பிர பல முன் னா ல் நடி கை உரு க்க ம் ..!! பல வ ருட ங் கள் கழி த்து வெளி யான உண் மை தக வ ல் ..!!

0 339

டி ராஜேந்தர் ஓர் தமிழ் திரைப்பட இயக்குனர், நடிகர் ,இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். கடந்த 1980ஆம் ஆண்டு வெளியான ஒரு தலை ராகம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் இதனை தொடர்ந்து ரயில் பயணங்களில் ,கிளிஞ்சல்கள், நெஞ்சில் ஒரு ராகம் ,தங்கைக்கு ஒரு கீதம், உயிருள்ளவரை உஷா ,உறவைக்காத்த கிளி போன்ற பல படங்களை இயக்கி தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார் .

குறிப்பாக தன்னுடைய அடுக்கு மொழி  வசனத்தின் மூலமாக ரசிகர்களுடைய பிரபலமானார் என்று கூட சொல்லலாம்.  இப்படி தொடர்ந்து பல படங்களை இயக்கிய இவர் பல முன்னணி நடிகைகளையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார் . அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகை அமலா.

இவர் ஆரம்ப காலகட்டத்தில் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது .மேலும் நடிகை அமலா கல்லூரி விடுதியில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  அப்போது நடிகை அமலாவின் அப்பாவும் , அம்மாவும் ஒரு சில காரணங்களால் தனித்தனியாக பிரிந்து விட்டனர் .

அந்த நேரத்தில் நடிகை அமலா ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.பின்னர் நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்ட நடிகை அமலா நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து தன்னுடைய சாப்பாட்டு செலவை பார்த்துக் கொண்டு வந்துள்ளார்.

இதையடுத்து  ஒருமுறை நடிகை அமலாவை டி ராஜேந்தர் பார்த்துள்ளார் . அப்போது அவரின் திறமையை பார்த்த இவர் அவரை தன்னுடைய படத்திலேயே நடிகையாக அறிமுகம் செய்து வைத்தார் . அந்த வகையில் வெளியான திரைப்படம் தான் கடந்த 1986ஆம் ஆண்டு வெளியான மைதிலி என்னை காதலி என்ற திரைப்படம் .

இதன் பிறகு பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார் நடிகை அமலா . மேலும் என்னுடைய வாழ்நாளில்  டி ராஜேந்தர் செய்த உதவியை மட்டும் நான் மறக்கவே மாட்டேன் என்று பல பேட்டிகளில் நடிகை அமலா கூறியிருந்தார் . இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.