நா ன் சிம் புவை காதலி க்கி றேன் , இ து நடப் பதற் கு வா ய்ப் பு இரு க்கு ..!! வெ ளிப்ப டை யாக கூ றிய பிரப ல சீரி யல் நடி கை ..!! இவ ரா என் று ஆச்சி ரிய மடை ந்த ரசி கர் க ள் ..!!
நடிகர் சிம்பு பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு தற்போது தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார் . மேலும் சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்து வந்த சிம்புவிற்கு இத்திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று கூட சொல்லலாம்.
தற்போது இவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார் . ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் இரண்டு படங்கள் வெளியான நிலையில், மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளனர் . இதனால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதையடுத்து 39 வயதாகும் நடிகர் சிம்புவிற்கு எப்போது திருமணம் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் . ஏற்கனவே நடிகைகள் நயன்தாரா மற்றும் ஹன்சிகாவுடன் காதல் ஏற்பட்டு பின்னர் பிரிந்து விட்டார் நடிகர் சிம்பு. இப்படி ஒரு நிலையில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் சிம்புவை,
காதலிப்பதாக வெளிப்படையாக கூறியுள்ளார் . அந்த வகையில் யாரடி நீ மோகினி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீநிதி .இப்படி பிரபலமான இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருவார். இந்நிலையில் தற்போது நடிகர் சிம்புவை காதலிப்பதாக கூறியிருக்கிறார்.
அந்த வகையில் பதிவு ஒன்றையும் போட்டு இருக்கிறார் . அதில், சிம்பு நீங்களும் சிங்கிள் , நான் கூட சிங்கிள் தான். உங்களையும் எல்லாரும் பிளேபாய் என்று சொல்றாங்க , என்னையும் எல்லோரும் பிரேகேர்ள்ளுனு சொல்றாங்க, உண்மையா காதலிச்சா இப்படித்தான் சொல்லுவாங்க , நீ வேணா என் கிட்ட வந்திடு ,
நான் உன்னை பார்த்துக்கிறேன் பத்திரமா என்றும், ஒருவேளை சிம்புவை கரெக்ட் பண்ணி விடுவாலோ என்று அனைவரும் நினைக்கலாம் . ஆனால் நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கு என்றும் அந்த பதிவில் கூறியிருந்தார் நடிகை ஸ்ரீநிதி . தற்போது அவர் போட்ட பதிவு இணையத்தில் தீயாய் பரவி வருகிறது…