நீ நடித் ததெ ல்லா ம் போது ம் , சீக்க ரம் கல் யா ணம் பண் ணு ..!! கீர் த்தி சுரே ஷின் செ யலா ல் கடு ப்பா ன அவ ரின் அம் மா ..!! வெளி யான தக வலை கண் டு ஷா க் கா ன ரசி க ர் கள் ..!!
கீர்த்தி சுரேஷ் ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார் . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் மலையாளத்தில் வெளியான கீதாஞ்சலி என்ற படத்தின் மூலம் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார் . இதைத்தொடர்ந்து விக்ரம்பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி, பைரவா,
தானா சேர்ந்த கூட்டம் சாமி 2 போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலம் ஆனார் . குறிப்பாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி , விஜய் , விக்ரம் , சூர்யா போன்ற பல பிரபலங்களுடன் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துகொண்டார் நடிகை கீர்த்தி சுரேஷ் .அதுமட்டுமில்லாமல் மகாநடி என்ற படத்திற்காக,
சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றார் நடிகை கீர்த்தி சுரேஷ் . இப்படி தேசிய விருது வெல்லும் அளவிற்கு திறமையான நடிப்பு இருந்தும் இவரால் ஒரு முன்னணி நடிகையாக வலம் வரமுடியவில்லை. மேலும் மகாநதி படத்திற்குப் பிறகு இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியையே சந்தித்தது .
இதையடுத்து சமீபத்தில் வெளியான சாணி காயிதம் என்ற திரைப்படம் மட்டும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதனை தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். மேலும் ஆரம்பத்திலிருந்து அதிகம் குடும்ப பாங்கான கதைகளை தேர்வு செய்து நடித்துவந்த கீர்த்தி சுரேஷ் .
தற்போது ஒரு சில படங்களில் மோசமான காட்சிகளிலும் நடித்து வருகிறார் . இப்படி மோசமான வழியில் போகும் தன்னுடைய மகளை பார்த்து கடுப்பான அவரின் அம்மா நீ நடித்தது எல்லாம் போதும் , சீக்கிரம் திருமணம் செய்து கொள் என்று கீர்த்தி சுரேஷிடம் கூறிவிட்டாராம் . இதனால் நடிகை கீர்த்தி சுரேஷ் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது…