சோமாலியாவாக மாற்றப்படும் தமிழகம்…!

0 232

சீர்காழி பழையார் சாலையில் பழையப்பாளையம்&மாதானத்தில் மீத்தேனுக்காக சுமார் ஆயிரக்கணக்காண ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி அப்பகுதியில் உழவை நாசப்படுத்தி வேலைவாய்ப்பை பறித்து,

மக்களின் தற்சார்பு வாழ்க்கையை சிதைத்துவிட்டனர் என்றும், இம்மீத்தேனை கொண்டுச் செல்ல ஏதுவாக பழையார்-நாகப்பட்டின கிழக்கு கடற்கரைச்சாலை திட்டத்தை துரிதப்படுத்துகின்றனர் என்றும்,

தொடக்கத்தில் மீத்தேனை எடுக்க ஆறுத்தொட்டிகளை அமைத்து மக்களை சமாதானப்படுத்திய பின்பு சிறிய இடைவெளியில் 6யை 18 ஆக கூட்டியுள்ளனர் என்றும் பதிவிட்டிருந்தோம்,

தற்போது அடுத்தக்கட்டமாக 29 கிலோமீட்டர் தொலைவுக்கு ராட்சச குழாய் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளதாக தகவல், இவையனைத்தும் விளைநிலங்கள் வழியாகத்தான் அமைக்கப்படுகிறது,

தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் பாலைவனமாக்கப்பட்ட நேரத்தில் காவிரிப்படுகை பகுதிகளில் விளைவிக்கப்படும் உணவுப்பொருட்கள் நாட்டின் உணவுத்தேவையை பெரும்பகுதி நிவர்த்தி செய்தது,

தற்போது இக்காவிரி படுகை பகுதிகள் வல்லாதிக்க வல்லூறுக்களால் சூறையாடப்படுவதை பார்த்தால் வெகுதொலைவில் இல்லை மற்றுமொரு சோமாலியா.

பதிவு:இரா.வேல்முருகன்.

இதை தடுக்க முடிந்தவரை பகிரவும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.