அம்பானி முதல் அனிதா வரை..! உருக்கமான வார்த்தைகள்..!

0 225

வல்லரசு இந்தியா.

வயிற்று பசி வாட்டியதால்
வழி தெரியா பழங்குடி
பட்டினி சாவை தாண்ட எண்ணி
அப்பாவித் தனமாக
அரிசி திருடி பிடிபட்டான்.

சட்டத்துக்கு உட்படுத்தாமல்
கேரளத்தின் மேட்டுக்குடிகள்
கட்டி இழுத்துவந்து
தலையில் தண்ணீர் ஊற்றி
அடித்து கொன்றனர்.

மோடியின் நட்பு கார்ப்பிரேட்
நிரவ் மோடி மல்லையா
பல்லாயிரம் கோடிகளை
பவ்யமாக சுருட்டிக்கொண்டு
தனி விமானத்தில் தப்பி சென்றனர்
ஊழல் துறை
வானத்தில் வெள்ளி பார்த்து
பக்கோடா சாப்பிட்டுக்கொண்டிருந்தது.

நீட் என்ற கல்வி தரப்படுத்தலை
தமிழ்நாட்டுக்குள்
மத்திய சர்க்கார் ஏவிவிட்டதால்
பச்சை மண் அனிதா
தூக்கில் தொங்கி
உயிரை மாய்த்துக்கொண்டாள்

திருப்பூர் மருத்துவ மாணவன்
சரத் பிரபு
டில்லி பல்கலை வளாகத்தில்
மர்மமான முறையில்
தூக்கில் பிணமாக தொங்கினான்
மத்திய மாநில அரசுகள்
ஆண்டாள் தேவதாசியா
சின்ன மேளமா என்று
புலனாய்வு கலகம் செய்தனர்.

ஒக்கி புயல் வந்தது
மூன்று நாட்கள் மேகம் மூடி
நூற்றைம்பது மைல் வேகத்தில்
சூறாவளி தாண்டவம் ஆடியது
மூவாயிரம் பேர் முச்சிரைத்து
ஆழ் கடலில் தத்தளித்தனர்
விமானம் வரும்
ஹெலிகொப்டர் வரும் என்று
எதிர்பார்த்தனர் கடலோடிகள்
கடலோடிகளின் கண்ணில்
தலைக்குமேல் விமானம் பறந்தது
அது மோடி ஈரானுக்கு போன
விமானம் என்று செய்தி வந்தது.

துபாயில் மரணமானார்
பிரபல நடிகை ஸ்ரீதேவி
ஸ்ரீதேவியின் உடலை கொண்டுவர
அரச கட்டளைக்கு உட்பட்டு
இந்திய விமானம் இரண்டு
துபாய்க்கு பறந்து போனது.

விழுப்புரத்தில்
பதின்நான்கு வயது சிறுமி
நான்கு காடையர்களால்
கற்பழிக்கப்பட்டாள்
தாயும் தம்பியும்
கழுத்தறுத்து கொல்லப்பட்டனர்.

பாலேஸ்வரம் முதியோர் இல்லத்தில்
முதியவர்களை கொன்று
எலும்பு ஏற்றுமதி செய்யப்பட்டதாக
செய்தி வந்தது
தமிழகத்தில்
சட்டம் ஒழுங்கு பூத்து குலுங்கி
பாலும் தேனும் ஓடுவதாக
கலர் போஸ்ட்டரில்
ஒபிஎஸ் ஈபிஎஸ் சிரிக்கின்றனர்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது
உறக்கத்தில் இருந்தார்
சங்கராச்சாரி
இரவு மகுடி ஊதி
பாம்பாட்டியதால்
அசந்து உறங்கியிருப்பார் என்று
அனுராதா ரமணன்
கூறியதாக செய்தி.

சங்கராச்சாரி
எழுந்து நிற்கவில்லை என்று
தமிழ்நாடு கச்சை கட்டியது
நொந்து நூலாகி
கொதித்துப்போன பாஜக
சென்னை ஐ ஐ ரி வழாகத்தில்
பழிதீர்க்கும் நோக்கில்
சமஸ்கிருத பாடலை பாடி
மீண்டும் முருங்கை மரம் ஏறியது.

– ஊர்க்குருவி-

You might also like

Leave A Reply

Your email address will not be published.