திருமணமாகி 6 ஆண்டு ஆகியும் குழந்தை இல்லை! சொத்துக்கள் போய்விடுமோ என்ற அச்சத்தில் கோடீஸ்வரர் செய்த செயல்

0 815

தமிழகத்தில் திருமணமாகி 6 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் வாரிசு இல்லாததால் பிறந்த 5 நாள் குழந்தையை கோடீஸ்வரர் விலைக்கு வாங்கிய சம்பவம் நடந்துள்ளதுபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே வேலூரை சேர்ந்த ஹாஜி முகமது, ஆமீனா பேகம் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை.இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. ஹாஜி, ஹொட்டல் மாஸ்டர். அவரது பக்கத்து வீட்டில் வசித்த சலவைத் தொழிலாளி கண்ணன் ஆமினா பேகத்திடம் பேசினார். கொரோனாவால் வருமானமின்றி கஷ்டப்படுகிறீர்கள். 4வது பெண் குழந்தையை விற்று விடுங்கள் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

பிறந்த 5 நாளே ஆன குழந்தையுடன் ஆமினா பேகத்தை காரில் ஈரோடுக்கு அழைத்துச் சென்றார், கண்ணன். ஈரோடு பஸ் நிலையத்தில் ஒரு பெண்ணிடம் குழந்தையை ஒப்படைத்த கண்ணன், ஒன்றரை லட்ச ரூபாயை வாங்கி ஆமினாவிடம் கொடுத்தார்.ஆமினாவிடம் வெற்றுப் பத்திரத்தில் கண்ணன் கையெழுத்து வாங்கினார். வேலூர் கிராமத்தில் கொண்டு வந்து விட்டார்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் பிறந்த குழந்தை குறித்து கேட்ட போது ஆமினா சரியாக பதில் அளிக்கவில்லை.இதனால் சந்தேகமடைந்த அவர்கள் பொலிசில் புகார் கொடுத்தனர்.இது தொடர்பாக விசாரித்த பொலிசார் கூறுகையில், திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த கோடீஸ்வரருக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.

இதனால் குடும்பத்தில் சண்டை ஏற்பட்டு வந்தது, மேலும் வாரிசு இல்லையென்றால் சொத்துக்கள் போய்விடுமோ என்ற அச்சத்தில் அந்த கோடீஸ்வரர் மற்றும் அவர் மனைவி பெண் குழந்தையை கண்ணன் மூலம் விலைக்கு வாங்கியுள்ளனர்.

இது தொடர்பில் கண்ணனை கைது செய்துள்ளோம், மேலும் கோடீஸ்வர தம்பதியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என கூறியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.