10 ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு தொகுத்து வழங்கிய அழகிய தமிழ் மகன் என்ற நிகழ்ச்சியில் சோம் பங்கேற்ற காணொளி ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது முக்கியமான போட்டியாளராக மாறி இருப்பவர் சோம்.இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பைனல்ஸ் வரை வந்தவர்.அதன் பின்னர் வேறு ஒரு துறையான ‘மார்ஷியல் ஆர்ட்ஸ்’ கற்று அதில் சிறந்து விளங்கி வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது அவர் செய்யும் சேட்டைகள் பலவும் வைரலாகி வருகிறது.பலருக்கும் சோமீன் கள்ளங் கபடமில்லாத மனது பிடித்திருக்கிறது என்று சொல்லலாம். இந்நிலையில் நிகழ்ச்சி வீடியோவை பார்த ரசிகர்கள் நிச்சயம் இவர் நடிக்கவில்லை, தாமாகவே இருக்கிறார் என்று கருத்து கூறி வருகின்றனர்.
சோமு அவர் சிறுவயதில் இருந்து வாய் பேசும் பொழுது அவருக்கு திக்குமாம் அதன் காரணத்தால் பல இடங்களில் சோமு பேசுவதை குறைத்து கொள்வாராம் பட வாய்ப்பு வரும் பொழுதும் ஆரம்ப காலத்தில் அவர் பல இயக்குனரிடம் பலமுறை பல இடங்களில் அவர் பேசுவதை குறைத்துக் கொண்டாராம் இதன் காரணமாகவே பல பட வாய்ப்புகளை இலந்துள்ளார் .சோமு இத்தகைய மனிதர் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ஷோ ஒன்றில் ஹவுஸ் மேட்டாக உள்ளார் .
அங்கு அவரவர் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சோகங்கள் எதையாவது ஒன்றை கூறும்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க் வைத்துள்ளனர். அந்த டாஸ்கிங் சோமு நான் பேசும்பொழுது வாய்திக்கும் என்று உண்மையை பேசினார் .ஆனால் அவர் பேசும் பொழுது வாய்திக்காமல் மிகவும் பொறுமையாக பேசியுள்ளார் .இதைக்கண்டு ஹவுஸ் மேட் அனைவரும் இது ஒன்றும் குறை இல்லை நீ மிகவும் அழகாக பேசுகிறாய் என்று அனைவரும் கைதட்டி பாராட்டி உள்ளனர் .
அப்பொழுதும் சோமு நான் பல இடங்களில் படம் நடிக்கும் பொழுது யாரிடமும் பேசமாட்டேன் பேசினாள் நான் திக்குவாய் என்பதை அனைவரும் அறிந்து கொள்வார் என்பதால் நான் பேசுவதை குறைத்துக்கொண்டேன் .படக்குழுவினர் அனைவரும் ஏன் சோமு பேச முன்வர மாட்டீர்கள் என்று அனைவரும் கேட்டிருக்கிறார்கள் அதையும் அங்கு பதிவிட்டுள்ளார். தீபாவளிக்கு வெளியான சூரரைபோற்று படத்தில் முக்கியமான கதா பா த்திரத்தில் நடித்துள்ளார் .