தாய்க்கு பின்னர் தாரம் என்று சொல்லும் இந்த உலகம் கல்யாணம் பண்ணிய பிறகு மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே சண்ணடை வரும் காரணத்தால் கணவனின் தாய் முதியோர் இல்லத்தில் சேர்க்க படுவார்கள் அப்படி சிலர் இருந்தாலும் மாமியார்களை தன தாய் போல பார்க்கும் சில பெண்களும் உண்டு புதுவையில் மாமியார்- மருமகள் ஒன்றாக சாப்பிட்டால் சலுகை அளித்து ஹோட்டலில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது வைரலாகி வருகிறது.எப்படியாவது மாமியார் மருமகளும் சாப்பிடும் போதுதான் அதிகம் சண்டை வரும் .அனால் இந்த உணவகத்துக்கு வந்தால் சாப்பிடும் வரையில் ஒன்றாக இருப்பார்கள் யாராலும் முடியாத இந்த மாமியார் மருமகள் சண்டையை சாப்பாட்டில் ஒன்று சேர்ந்தால் சரி புதுவை நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்று படகுத்துறை அருகே ஜல்லிக்கட்டு என்ற ஹோட்டல் தொடங்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் ஞானபானுவின் மகனான நிருபன் இந்த ஹோட்டலின் முதலாளியாவார்.தமிழ் ஆர்வத்தால் ஹோட்டல் தொடங்கிய நாளில்இருந்தே பல வித்தியாசமான சலுகைகளை அறிவித்துள்ளாராம்.அதாவது, சாப்பிட வருபவர்கள் 100 திருக்குறளை ஒப்புவித்தால் அவர்களுக்கு பிரியாணி மற்றும் காடை வறுவல், இறால் தொக்கு, நண்டு வறுவல், வஞ்சிரம் மீன் உள்ளிட்ட 20 வகை அசைவ விருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாமியார் – மருமகள் ஒன்றாக வந்து சாப்பிட்டால் அவர்களுக்கு 50 சதவீத கட்டணம் இலவசமாம், அவர்கள் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டால் முற்றிலும் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை பார்த்து இதுவரை 4 பேர் 100 திருக்குறளை ஒப்புவித்து பிரியாணி சாப்பிட்டு சென்றுள்ளார்களாம், ஆனால் இதுவரையிலும் ஒரு மாமியார்- மருமகள் கூட வரவில்லை என்பது சோகமான தகவல்.