உக்ரைன் நாட்டில் 24 வயது இளைஞர் ஒருவர் தன்னை இராணுவத்தில் சேர்க்ககூடாது என்பதற்காக 81 வயது மூதாட்டியை திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உக்ரைன் நாட்டில் இளைஞர்கள் கட்டாயம் இராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருவதால் இதிலிருந்து தப்பித்துக்கொள்ள அலெக்ஸாண்டர் கொன்ட்ராட்யுக் என்ற இளைஞர் 81 வயது மூதாட்டியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.ஒரு மூதாட்டியை திருமணம் செய்துகொண்டால் எப்படி அதிலுருந்து தப்பிக்க முடியும் என்ற சந்தேகம் எழலாம். அந்த நாட்டில் அது முடியும்.எப்படியென்றால், வீட்டில் இருக்கும் மனைவி மாற்றுத்திறனாளி எனும் பட்சத்தில் அந்த கணவர் கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றொரு விதி அங்கு உண்டு.
இதனால், தனது கிராமத்தில் இருக்கும் தனது உறவுமுறை மூதாட்டியான 81 வயது ஸினைடா இல்லாரியோனோவ்னா-வை அலெக்ஸாண்டர் மணம் முடித்துக்கொண்டார். அந்த இளைஞரைத் தேடி, ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் எண்ணத்தில் வரும் அதிகாரிகளோ, அலெக்ஸாண்டரின் திருமண சான்றிதழையும், அலெக்ஸாண்டரின் 81 வயது மனைவி மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றிதழையும் பார்த்துவிட்டு, பின்வாங்கிவிடுகின்றனர்.
இதனிடையே, அலெக்ஸாண்டர் திருமணத்துக்குப் பின் ஒரு முறை கூட, தனது மனைவியின் வீட்டுக்கு வருவதில்லை என்று அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். ஆனால், மூதாட்டியோ, தனது 24 வயதான கணவர் தன்னை பாசமாக பார்த்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.