பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு வ ன்கொ டுமை மி ரட்டல் விடுத்த இளைஞர், ப கிரங்கமாக மன்னிப்பு கேட்டு, விஜய் சேதுபதியிடம் மன்றாடும் காணொளி வெளியாகியுள்ளது.குறித்த காணொளியில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பம் தம்மை மன்னிக்க வேண்டும் எனவும்,கோ வத்தின் வெளிப்பாடாகவே, தாம் அந்த செயலை மேற்கொண்டதாகவும்,வாழ்க்கையில் இதுபோன்ற நிலை தமக்கு ஏற்பட்டதில்லை எனவும், இனி மேலும், இந்த த வறை செய்வதில்லை எனவும், அதனால் தம்மை மன்னிக்க வேண்டும் எனவும் அந்த இளைஞர் மன்றாடியுள்ளார்.இலங்கை கிரிக்கெட் அணி வீரர் முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த நிலையில் அதற்கு பலத்த எ திர்ப்பு எழுந்தது.
மேலும் முரளிதரனே நடிகர் விஜய் சேதுபதியை அப்படத்தில் இருந்து விலக கோரினார். இதை தொடர்ந்து விஜய் சேதுபதி அப்படத்தில் இருந்து விலகினார்.
அதன் பின், இணையவாசி ஒருவர், மிகவும் மோ சமான வார்த்தைகளால், விஜய்சேதுபதியின் மகளுக்கு பா லி யல் மி ர ட்டல் விடுத்திருந்தார்.
இது பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த நபரை கண்டுபிடித்து த ண்டனை வழங்க பல்வேறு தரப்பினர் கோரினர்.
இதையடுத்து அந்த நபர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இண்டர் போல் உதவியுடன், அவரை கைது செய்ய நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.