1300 வருடங்களாக நீரில் மிதக்கும் அதிசய விஷ்ணு சிலை! எங்கு தெரியுமா? வாய்பிளக்கும் விஞ்ஞானிகள்.!

0 5,429

பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும், படங்களையும் நாம் பார்த்திருப்போம். ஆனால் மனிதர்களை போல் படுத்து கொண்டு 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு அதிசய பெருமாள் சிலை உள்ளது.இது குறித்து பலர் அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.நேபால் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர் தொலைவில் புத்தானிகந்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள விஷ்ணு சிலை ஆதிசேஷன் மேல்படுத்து கொண்டு இருப்பது போல் வடிவமைக்கபட்டு உள்ளது.

கிட்டதட்ட 14 அடியில் உயரத்தில் மிகவும் பிரமாண்டமாக ஒரே கல்லால் செய்யபட்டு உள்ள இந்த சிலை, இத்தனை வருடங்களாக நீரில் மிதந்தபடியே உள்ளது. இன்று வரை இது ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.

இதேவேளை, 7 ஆம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னன், இந்த சிலையை நிறுவியதாக வரலாறு கூறுகிறது.

இந்த சிலை மிதந்தபடியே இருந்தாலும், இதற்கான அர்ச்சனைகளும் அபிஷேகங்களும் தினமும் நடந்த வண்ணமே உள்ளன.நீரில் மிதக்கும் இந்த விஷ்ணுவின் அருளை பெற பக்தர்கள் எப்போதும் இங்கு வந்த வண்ணமே உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.