தலையில் உள்ள பொடுகு நீங்க நீங்கள் செய்ய வேண்டியது இவையே போதும்..!

0 1,272

1.தயிருடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற விடவும்.பின்பு தலைக்கு தேய்த்து குளிக்கவும்.

2.சின்ன வெங்காயம் சாறு எடுத்து அதை தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்கவும்.

3.வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்து , காலையில் அதை மசித்து தலையில் தேய்த்து ஊற வைக்கவும். 20 நிமிடங்கள் கழித்து குளிக்கவும்.

தலைப்பொடுகு என்பது தலையில் உள்ள சருமத்தின் இறந்த செல்களை உதிர்தல் ஆகும். சருமத்தின்
செல்கள் இறக்கும்போது அவை உதிர்வது சாதாரணமான நிகழ்வுதான். தலையினை
சுத்தம் செய்த பிறகு சுமார் ஒரு சதுர சென்டி மீட்டரில் 4,87,000 செல்கள்
உதிர்க்கப்படும். ஆனால் சில
மக்களுக்கு வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் இந்த உதிர்தல் ஏற்படும். இது
காலம் காலமாக தொடர்வதாக இருக்கலாம் அல்லது சில தூண்டுதல் காரணிகளால்
ஏற்படக்கூடும். இதன் விளைவாக சுமார் ஒரு சதுர சென்டி மீட்டரில் 8,00,000
செல்கள் உதிர்க்கப்படலாம். இதன் காரணமாக சிவத்தல் மற்றும் எரிச்சல்
சேர்ந்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இது அதிகமாக நெற்றி, மூக்கு
மடிப்பு, காது பின்புறம் மற்றும் தலையில் அதிகமாக தலையில் வெள்ளைச்
செதில்களாக (Seborrheic dermatitis) ஏற்படும்.

இந்த இன மக்கள், இந்தப் பகுதியினைச் சேர்ந்த மக்கள் என்றில்லாமல்
அனைத்து பகுதிகளிலும் வாழும் மக்களை இந்த பொடுகு பாதிக்கிறது. பொதுவாகவே,
பூப்படைந்த வயதிற்கு பின் உள்ள வாழ்வுக் காலங்களில் ஆண், பெண்
பாரபட்சமின்றி இந்த பொடுகு பாதிப்பு ஏற்படுகிறது. ஏறக்குறைய மக்கள்
தொகையில் பாதியளவிற்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இது பொதுவாக அரிப்பினை
ஏற்படுத்தக் கூடியது. முதிர்ந்த சிவப்பணுக்கள் இந்த பொடுகுத் தோற்றத்தில்
முக்கியப் பங்குவகிக்கின்றன. பொடுகுத் தொந்தரவின் அளவுகள் சராசரியாக
இருப்பினும் காலங்களைப் பொறுத்து இதன் பாதிப்பு சற்று மாறுபடுகிறது.
முக்கியமாக குளிர்காலங்களில் அதன் பாதிப்பு அதிகமாகவே உள்ளது.பொடுகுத்
தொந்தரவின் பல பாதிப்புகளை சில ஷாம்பு வகைகளைக் (முடியினை சுத்தம் செய்யும்
பொருள்) கொண்டு தீர்க்க முடிந்தாலும், இதற்கு உண்மையான சிகிச்சை இல்லை.

பொடுகுப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் உளவியல் மற்றும் உடலியியல் ஆகிய இரு வழிகளிலும் தங்களை பரிசோதிக்க வேண்டும்
அறிகுறிகள்
தலையில் அரித்தல் மற்றும் சில தொந்தரவுகள்
ஏற்படுவதே பொடுகுத் தொல்லையின் அறிகுறிகளாகும். சிவப்பு மற்றும் சற்று
அரிப்பு ஏற்படுவது போன்ற சருமத்தின் உணர்ச்சிகள் போன்றவையும் இதன்
அறிகுறிகள் ஆகும்.

சில தூண்டு காரணிகள்

பொடுகினை ஏற்படுத்தும் சில தூண்டு காரணிகளின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • அழுத்தம் – அதிகப்படியான மன அழுத்தம் தரும் வேலைகள் மற்றும் செயல்கள், அதிர்ச்சி தரும் செயல்கள், விஷயங்கள்
  • ஒரு பொதுவான தோல் நிலை – ஊறல் தரும் தோல் ஒவ்வாமை, இதனால் எண்ணெய் பிசுபிசுப்பு கொண்ட சருமம் ஏற்படும்.
  • தேவையற்ற பொருட்கள் – முடியினை தேவையற்ற பல பொருட்கள்
    கொண்டு சுத்தப்படுத்துவது. அதிகப்படியான மற்றும் அளவுக்கதிகமான பயன்பாட்டு
    பொருட்களால் பொடுகு ஏற்படும் வாய்ப்புள்ளது.
  • போதிய சுகாதாரம் இல்லாதது – போதுமான அளவிற்கு ஷாம்பூ
    பயன்படுத்தாது முடியினை சரியாக பராமரிக்கவில்லையெனில், தலையில் உள்ள சருமம்
    உதிர்ந்து விழத்தொடங்கும். இதன் காரணமாக சருமத்தின் எல்லையில் உள்ள
    செல்கள் இறக்கும் பின்னர் அதன் விளைவாக பொடுகு பிரச்சினை ஏற்படும்.
  • குளிர் மற்றும் உலர்ந்த குளிர்காலச் சூழ்நிலைகள்
  • பூசண பீடிப்பு
  • சொரியாஸிஸ் (சிவப்பு நிறத்துடன் அரிப்பு மற்றும் சில திட்டுகள் ஏற்படுதல்).

You might also like

Leave A Reply

Your email address will not be published.