ஆடி 18 ஆடி பெருக்கு இதுக்கு என்ன தான் வரலாறு..? பெண்களுக்கு உயரிய தொடர்பு உண்டு..!

0 1,307

ஆடிப்பெருக்கு என்பது
ஆடி மாதம் 18ம் நாள்
தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும்.
இதனை
பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள்.
தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால்
ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும்.
இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர்.

மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக்
கண்டு களிப்பர்.
சென்று வழிபடவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைத் தேர்வு செய்து கொள்வார்கள்.
அந்த இடத்தை சுத்தம் செய்து, பசுஞ்சாணத்தால்
மெழுகி,அதன் மேல் வாழை இலையை விரித்து,
பிள்ளையார் சிலை அல்லது அருகம்புல் விநாயகர் வைத்து அதன் முன் அகல் விளக்கு ஏற்றி வைப்பார்கள்.
வெற்றிலை,
பாக்கு,
பழம் படைத்து,
ஊதுவத்தி,
கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலை அருளுமாறு விநாயகரை வழிபடுவர்.
ஆற்றினை ,ஆற்றின் நீர்ப்பெருக்கை வழிபட்டு
வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இதனால்
#நீர்வளம் பெருகியது போல்,
அவர்கள்
வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும், செல்வமும்
வெள்ளமாய்ப் பெருகும் என்ற நம்பிக்கைக் கொள்கிறார்கள்.

தங்கள் வீட்டில்
தேங்காய்சாதம், சர்க்கரைப்பொங்கல், எலுமிச்சைப்பழம்சாதம்,
தக்காளிசாதம்,தயிர்சாதம் என்று தயாரித்து அதை அருகிருக்கும் ஆற்றங்கரையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உண்பார்கள்.

ஆடி பதினெட்டாம் நாள்
காவிரிப்பெண்ணுக்கு
மசக்கை என்று கூறி மக்கள் பலவகையான
அன்னங்களைத் தயாரித்துக் கொண்டு போய்
காவிரிக் கரையில் வைத்து
நோன்பு நோற்பதும் உண்டு.

திருச்சி காவிரியாற்றின் கரையில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது.

ஸ்ரீரங்கத்தில் புகழ்பெற்ற
அம்மாமண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும்.

குழந்தை செல்வம்,
நீடித்த ஆயுள்,
வாழ்வில் சுபிட்சம் பெற ஆடிப்பெருக்கன்று பெண்கள் ஆற்றங்கரைக்குச்சென்று சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள். சுமங்கலிப் பெண்கள் மாங்கல்ய பூஜை செய்து தாலிச்சரடை மாற்றிக்கொள்வார்கள்.

வீட்டிலேயேசெய்யலாம் ஆடிப்பெருக்கு பூஜை காவிரிக்கரையோரம் உள்ளவர்கள் மட்டுமே ஆடிப்பெருக்கைக் கொண்டாட வேண்டும் என்பதில்லை.

ஆடிப்பெருக்கு பூஜையை
நம் வீட்டிலும் எளிய முறையில்
செய்யலாம்.
.
ஒரு செம்பில்
அரைத்த மஞ்சளை
சிறிதளவு போடவேண்டும்.
நிறை குடத்திலிருந்து
அந்த செம்பில் நீர் எடுத்ததும், மஞ்சள் கரைந்துவிடும். திருவிளக்கேற்றி
அந்த நீரை விளக்கின்
முன் வைக்க வேண்டும். தண்ணீரில்
உதிரிப் பூக்களைப் போட வேண்டும்.

கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி
கங்கை,
யமுனை,
நர்மதை,
காவிரி,
வைகை
உள்ளிட்ட புண்ணியத் தீர்த்தங்களை மனதில் நினைத்து,
முன்னொரு காலத்தில் மூதாதையர்
உங்களை புனிதமாகக் கருதி வழிபட்டதுபோல்
எங்களுக்கும்
அத்தகைய மனநிலையைத் தாருங்கள் என்று வேண்டுங்கள்.
காவிரியையும் தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரை மனதார வணங்குங்கள்.
பூஜை முடிந்ததும்
செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விட வேண்டும்.
அன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.

இங்கு பேசப்பட்ட புராணங்களை நீங்கள் புறந்தள்ளிவிட்டு நீர்வழிபாடு செய்யலாம்.அடிப்படை அதுவே.நீர்ப்பெருக்கைப்பபோற்றுதல்.
#நீரின்றியமையாதுஉலகு அதுவே அடிநாதம்.

அட்சய திரிதியை நாளைப்போலவே ஆடிப்பெருக்கு நந்நாளிலும் மக்கள்
புதுப்பொன் நகை வாங்குகிறார்கள்.
இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம்.
நாம் செய்கின்ற நற்செயல்களால் புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் துவங்கும் சேமிப்பும் பல மடங்காய் பெருகும் என்பர்.

ஆடி மாதத்தில் பொதுவாகப்
புதுத்தொழில் துவங்குவதில்லை என்று சொல்வார்கள்.
ஆனால், ஆடிப்பெருக்கு நாள்
மட்டும் விதிவிலக்காகிறது.

நன்றி. விழக்கால வாழ்த்துகள்.

பதிவு:Sankaran Nsk

பின் குறிப்பு: அந்த காலத்தில் ஆற்றில் கழிவுகளை அவர்கள் கொட்டவில்லை ஆனால் இன்று ஆறுகளையே. கழிவுகள் ஆக்கிரமிப்பு செய்து கொண்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.