இட்லிக்கும் ஒரு கரண்டி மாவு தான். தோசைக்கும் ஒரு கரண்டி மாவு தான். இட்டிலியின் விலையை விட தோசையின் விலை கூடுதலாக இருக்க காரணம் என்ன?
காரணம் ஒன்றே, தோசைக்கு கூடுதல் கவனம் தேவை, ஆதலால் கூடுதல் விலை.
விளக்கமாக சொல்லவேன்றும் என்றால், இட்லி – மாவை ஊற்றி மூடிவைத்தால் போதும், சற்றுநேரத்தில் விடை கிடைத்துவிடும், ஒரு ஆள் அதன் அருகில் நின்று பார்க்கவேன்றும் என்று ஏதும் கிடையாது, ஒரே நேரத்தில் ஒரே பொருள் செலவில் ஐம்பதுக்கு மேல் அவித்துவிடலாம்.
தோசை – அதே மாவுதான், ஆனால் கூடுதலாக எண்ணெய் தேவை, ஒரு ஆள் கூடவே நிற்கணும், ஒரே நேரத்தில் ஒரே பொருள் செலவில் அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு தான் சுட முடியும்.
வேடிக்கையாக சொல்லவேன்றும் என்றால், இட்லி – பள்ளியில் ஆசிரியர் நடத்தும் போதே பாடங்களை புரிந்துகொள்ளும் மாணவன்.
தோசை – சிறப்பு வகுப்பு தேவையான மாணவன்
சற்று உற்று கவனியுங்கள், தோற்றம் குணாதசியம் கூட ஒற்றுப்போகும்.
பதில படிச்சி கேவபடதீங்க இப்புடியெரு கேள்விய கேட்டவர நினச்சி பாருங்க..!
Less tension more work..