மருந்துகள் தயாரிப்பதற்காக வெளிநாடுகளுக்கு முற்றிய முருங்கை விதைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வீடுகளில் முருங்கை மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. மர உச்சியில் பறிக்க முடியாமல் முற்றி காய்ந்துள்ள முருங்கைகாய்களை பார்த்து தேர்வு செய்து முற்றி உலர்ந்த காய்களை, ஒரு காய் 2 ரூபாய், 3 ரூபாய் வரை கொடுத்து வியாபாரிகள் வாங்குகின்றனர்.
அந்த காய்களில் உள்ள விதைகளை மட்டும் எடுத்து விட்டு மற்றவற்றை குப்பையில் போட்டு விடுகின்றனர். இந்த விதைகளுக்குள் உள்ள பருப்பை ராமநாதபுரத்துக்கு வியாபாரிகள் அனுப்புகின்றனர்.
அங்கிருந்து முருங்கை பருப்பு, சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவை அங்கு மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
குறிப்பாக ரத்தசோகை நீக்கவும், மலட்டு தன்மைக்கு சிகிச்சை அளிக்கும் மருந்து தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. முருங்கை கீரை மற்றும் முருங்கைக்காயில் இரும்பு சத்து, அனைத்துவகை வைட்டமின்கள் இருக்கி
எனவே சித்த மருத்துவத்தில் முருங்கைகாய் லேகியம் தயாரித்து கொடுக்கப்படுகிறது. இதை சாப்பிட்டால் ரத்த சோகை நீங்கும்
‘முருங்கைக்காயில் இரும்பு சத்து, வைட்டமின்கள் சத்து உள்ளது. எளிதாக கிடைக்கும் இந்த முருங்கைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்
முருங்கையின் மருத்துவ மகிமை:
வெளிநாட்டினர் முருங்கையின் சத்துக்களை தனியாக பிரித்து மருந்தாகவும், அழகு சாதன பொருட்கள் தயாரிப்பிலும் பெருமளவு பயன்படுத்துகின்றனர்.
தமிழகத்தில் இருந்து முருங்கை விதைகளை சேகரித்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய விவசாயிகள் நேரடியாகவும், மறைமுகமாவும் உதவுகின்றனர்.
முற்றிய முருங்கையின் விதைகளை விலை கொடுத்து வாங்குகிறார்.