2018ன் சிறந்த குறும்படம் என்ற விருது இதற்கு கொடுக்கவில்லை என்றாலும் முடிந்த அளவு தர்சார்பை நோக்கி பயணம் செய்யுங்கள்..!
இதுபோன்ற சமூக சிந்தனைகளை மக்களுக்கு கொண்டு செல்லவிடில் எதிர்கால விவசாய அழிவிற்கு நாமும் ஒரு காரணமே..!
இந்தியாவில் வாழ்ந்துவந்த மக்கள் பெரும்பாலும் அவர்களின் வாழ்க்கை முறைகளை தற்ச்சார்பு அல்லது சுயசார்பு முறைப்படியே வகுத்துக்கொண்டு வாழ்ந்துவந்துள்ளனர்.
தற்ச்சார்பு அல்லது சுயசார்பு வாழ்க்கைமுறை என்றால் தனக்கு தேவையானவற்றை தானே செய்துகொள்ளும் திறனோடு வாழ்தல் ஆகும். இதன் மூலம் ஓர் தன்னிறைவான வாழ்க்கையை வாழ முடியும்.
ஆங்கிலேயர் வருகைக்கு முந்தைய இந்தியா முற்றிலும் தற்ச்சார்பு முறையிலே இருந்துவந்துள்ளது. ஆங்கிலேயர் வருகைக்கு பின்னர் படிப்படியாக அதிலிருந்து விலகவேண்டிய சூழலில் சிக்கி தற்பொழுது முழுமையான சார்புநிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.
இது கொஞ்சம் கொஞ்சமாக காலத்தால் ஒவ்வொரு அரசின் செயல்பாடுகளால் நிகழ்ந்துள்ள ஒன்று எனலாம்
பார்த்துவிட்டு பகிரவும்..!