குடல்புண்,அல்சரை குணப்படுத்த மாதுளையால் முடியும்..! கவலையை விடுங்கள்

0 452

பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலை எந்த நோயும் தாக்காது. அதுவும் அந்தந்த பருவகாலங்களில் விளையும் பழங்கள், அதிக பலனை தரும்.

குறிப்பாக, மாதுளம்பழத்தை சாப்பிட்டு வந்தால், உடலை தாக்கும் முக்கிய நோய்களை விரட்டலாம்.
மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன.

இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்துக்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தை போக்குகிறது; இருமலை நிறுத்துகிறது.
புளிப்பு மாதுளையை சாப்பிட்டால், வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்கு சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது.

மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால், ரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.
தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலவீனம் அடைந்தவர்கள், மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும்; எடை கூடும்.

தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலவீனம் உள்ளவர்கள், மாதுளம்பழம் சாப்பிடுவதால், மிகுந்த தியை பெறலாம்.
மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால், விக்கல் உடனே நிற்கும். அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால், உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின், தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும்.

புதிய ரத்தம் உற்பத்தியாகும். மாதுளம் பூக்களை உலர்த்தி பொடித்து வைத்துக் கொண்டு, வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு. 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக, மூன்று தினங்களுக்கு சாப்பிட்டால், பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூச்சாற்றை, 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.

மாதுளம் பூக்கள், 15 கிராம் எடுத்து, 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப்படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்ப நோய்கள் தீரும்.

பகிருங்கள் பலரும் தெரிந்து பயன்பெறட்டும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.