வீரனாய் இருந்த தமிழன், இன்று கோழையாய் நிற்கிறான்.
ஒரு கண்டத்தையே கட்டி காத்த தமிழன், இன்று ஒரு ஊரில் கூட சிறந்த தலைவனை தேர்ந்தெடுக்க தெரியாதவன் ஆகிவிட்டான்
உலகிற்கே வணிகம் செய்த தமிழன், இன்று ஒரு வேளை உணவுக்கு போராடி கொண்டிருக்கிறான்.
அனைத்து திறமைகளும் வளர்த்து உலகிற்கு காட்டிய தமிழன், இன்று திறமைகள் இருந்தும் ஒடுக்கப்படுகிறான்.
சுதந்திரமாய் இருந்த தமிழன், இன்று கூனி, குறுகி அடிமைப்பட்டு கிடக்கிறான்.
தன்னலம் கருதாத தமிழன், இன்று தாழ்வு மனப்பான்மையில் அனைத்தையும் இழந்து கொண்டிருக்கிறான்.
ஒற்றுமையாய் இருந்து ஆசியா கண்டத்தையே வென்ற தமிழன், இன்று ஒற்றுமை இழந்து சீரழிந்து கொண்டிருக்கிறான்.
வந்தவரை எல்லாம் வாழ வைத்த தமிழன், வந்தவனை எல்லாம் நம்பி நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறான்.
தன் இனத்துக்காகவும், தன் நாட்டுக்காகவும் உயிர் துறந்த நம் முன்னோர்களை மறந்து, கடவுளை வேறு எங்கேயோ தேடிக்கொண்டிருக்ககிறான்.
தமிழா ஒன்றுபடுவோம். வந்தாரை வாழ வைத்து நாம் அழிந்தது போதும். நம் அடுத்த தலைமுறை காக்க நம் மொழியையும், நம் இனத்தையும் காப்போம்.
வாழ்க தமிழ் … தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்.
சிந்தியுங்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு தாருங்கள்.