விவசாயம் செய்யும் போது விளைச்சல் அதிகம் பெற மந்திரம் சொன்னால் போதும்..! சிரிக்காதிங்க படிச்சி பாருங்க..!
இளைஞர்களை ஈர்ப்பதற்கு வயல்வெளிகளில் அழகுப்போட்டி நடத்த வேண்டும் என்றும், வயல்வெளிகளில் வேத மந்திரங்கள் ஓதினால் விளைச்சல் அதிகரிக்கும் என்ற கோவா பாஜக அமைச்சரின் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.
புதன் கிழமை சட்ட மன்றத்தில் வேளாண்மை துறைக்கான மானிய கோரிக்கைகளுக்கு பதிலளித்த அமைச்சர், வேளாண்மை தொழிலை கவர்ச்சிகரமாக மாற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று கூறினார். இன்றைய இளைஞர்களுக்கு விவசாயம் என்பது வயதானவர்கள் செய்யும் வேலையென நினைக்கிறார்கள் வேளாண்மையை ஊக்கப்படுத்த இளைஞர்களை விவசாயப்பணிக்களுக்கு ஈர்ப்பது முக்கிய தேவையென கூறியுள்ளார்.
வயல் வெளிகளில் அழகுப்போட்டி நடத்தினால் இளைஞர்கள் வருவார்கள். இளைஞர்களை வரவைக்க சாத்தியமான எல்லா செயல்களையும் செய்ய வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தினார். சமீபத்தில் வயல்வெளிகளில் வேத மந்திரங்களை ஓதும் போது நெற்பயிருக்கு காஸ்மிக் எனர்ஜி கிடைக்கும் அதனால் விளைச்சல் அதிகமாகுமென விவசாயிகளிடம் கூறினார்.
இப்புடியெல்லாம் முட்டாள் அமைச்சர்களை கொண்ட தேசம் தான் இந்தியா..!
உடனே வேதம் ஒதும் நபர்கள் ஆம் விளையும் என்று முட்டுகோடுக்க வருவார்களே தவிர விவசாயம் செய்ய வரமாட்டார்கள்..!