சமூக வலைதளங்களில் பரவும் தகவல்: வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறையா?- அதிகாரிகள் விளக்கம்
வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை விடப்படுவதாக வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேற்று தகவல் பரவியது.
‘28-ம் தேதி 4-வது சனிக்கிழமை, 29-ம் தேதி ஞாயிறு, 30-ம் தேதி புத்த பூர்ணிமா, மே 1 உழைப்பாளர் தினம் என தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.
எனவே, வாடிக்கையாளர்கள் வங்கி பரிவர்த்தனைகளை 27-ம் தேதியே (நேற்று) முடித்துக்கொள்ள வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து பொதுத்துறை வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
28-ம் தேதி சனி, 29-ம் தேதி ஞாயிறு ஆகிய இரு நாட்களும் வங்கிகளுக்கு வழக்கம்போல விடுமுறை. மே 1-ம் தேதி செவ்வாயன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு விடுமுறை. ஆனால், 30-ம் தேதி திங்கள் கிழமை வங்கிகள் இயங்கும்.
வட இந்தியாவில் மட்டுமே வங்கிகளுக்கு புத்த பூர்ணிமாவுக்காக விடுமுறை விடப்படு கிறது. தமிழகத்தில் விடுமுறை கிடையாது. எனவே, வங்கிகள் திங்கள்கிழமை வழக்கம்போல செயல்படும்.
அன்றைய தினம் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்துப் பரிவர்த்தனைகளும் நடைபெறும். தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என சமூக வலைதளங்களில் பரவியது தவறான தகவல்.
அடுத்தடுத்து விடுமுறை வருவதைக் கருத்தில் கொண்டு, அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் போதிய அளவு பணம் இருப்பு வைக்கவும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.