ராமார் பிள்ளை, LMES, சீமான், மூலிகை பெட்ரோலில் நடந்தது என்ன..?

0 823

நான் பிறப்பதற்கு முன்பே இந்த சர்ச்சை தொடர்கிறது என்கிறார்கள் ஆனால் தீர்வு இன்று வரை எட்டவில்லை..!

இந்த வருடம் இந்த சர்ச்சை தீவிரமடைந்தது, இதை தொடர்ந்து ராமர் பிள்ளையும் பலவித காணொளிகள் மூலம் காட்சியளித்தார்.‌‍.!

மூலிகை எரிபொருள் கிடைக்காத தமிழன் கண்டுபிடிப்பு அரியணையில் அமராதா என்றெல்லாம் யோசித்தவனும் கூட நான்..!

ஒரு லிட்டர் 5,4ரூபாய் என்றெல்லாம் கூறியபோது இவையெல்லாம் சாத்தியமா என்று சிந்தித்தவனும் கூட நான்..!

இதை LMES கையில் எடுத்து சோதனைக்கு ராமர் பிள்ளையை அழைத்து சோதனை செய்து காட்ட கூறியது..! ராமர் பிள்ளையும் செய்து காட்ட எரிபொருள் எறிந்தது.! இதில் தான் சர்ச்சை தீவிரமடைந்தது..!

எனக்கு உங்கள் அளவிற்கு அறிவியல் தெரியாத காரணத்தால் சில தகவல்களை நான் அறிந்த வரையில் முன் மொழிகிறேன்.!

இந்த உலகில் எந்த ஒரு பொருளுக்கும் நிரந்தர தரம் கிடையாது, ஒவ்வொரு முறையும் பொருளுக்கு தகுந்தவாறு தரம் மாறிக்கொண்டே இருக்கும்..!

ஆரம்பத்தில் ஆயில் மோட்டார், பிறகு டீசல் மோட்டார் ‍, பிறகு பெட்ரோல் மோட்டார் பிறகு மின்சார மோட்டார்கள் இவை அனைத்தும் ஒரே நாளில் கண்டுபிடிக்கப்படவில்லை, தேவைக்கேற்ப மாற்றி அமைக்க பட்டதே..!

ஒருவேளை ராமர் பிள்ளையால் 5ரூபாய்க்கு எரிபொருள் கொடுக்க முடியும் என்றால் இந்த எரிபொருளுக்கு ஏற்ற இன்ஜினை வடிவமைப்பதே வளர்ச்சியே தவிர ஏற்கனவே உள்ள என்ஜினில் இவரின் எரிபொருள் பயன்படுத்தினால் பழுதாகிவிடும் என்பதல்ல அறிவியல்..!

LMES சோதனையில் ராமர் பிள்ளை ஏமாற்றுகிறார் என்று ஆதாரத்துடன் விளக்கி கூறிவிட்டார்கள்..! இதை தகர்க்க ராமர் பிள்ளை எரிபொருளை வெளியிடாமல் எத்தனை வீடியோ பதிவிட்டாலும் இங்கு யாரும் ஏற்றுக்கொள்ளபோவதில்லை..!

ஆயிரம் தடைகள் இருந்தாலும் அவரை சார்ந்த வாழும் ஒரு 100பேரின் ஒருமாத எரிபொருள் தேவையை இவர் 5ரூபாய்க்கு வழங்கி சோதனையில் ஈடுபட்டு அந்த 100வாகன உரிமையாளர்களின் கருத்தையும் பொதுமக்களின் முன்னிலையில் கூற முயற்சிப்பதே அங்கிகார தேடலே தவிர ஒவ்வொரு முறையும் இடையூர்களை காரணம் காட்டி விலகுவது அங்கிகார தேடலுக்கு அழகல்ல..!

இன்னும் ஓரிரு மாதங்களில் ராமர் பிள்ளை எரிபொருள் உண்மை என்றால் ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் அவரை சார்ந்து எரிபொருளை வெளியிடுவோம் என்று கூறிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டே ஆகவேண்டும்..!

ஒருவேளை வெளியிட தவறினால் ராமர் பிள்ளை இத்தனை காலம் எரிபொருள் என்று ஏமாற்றினார் என்று இந்த சமூகம் முத்திரை குத்தும் என்னையும் சேர்த்து..!

ஒரு தமிழினின் கண்டுபிடிப்பு உண்மையாக இருக்கும் என்று மூலிகை எரிபொருள் என்று பல பதிவுகளில் ராமர் பிள்ளையின் கண்டுபிடிப்பை வெளிகொண்டுவர நினைவர்களில் நானும் ஒருவன்..! அதற்கும் நீங்களே சாட்சி

ஸ்டெர்லைட் பிரச்சனையில் LMES சர்ச்சை கருத்துகளை கூறினார்கள் என்பதை யாரும் இங்கு மறுக்கவில்லை அதற்காக இதுவும் ஒரு ஏமாற்று வேலை என்று கூறுவதில் நியாயம் இல்லை..!

ஆனால் ராமர் பிள்ளையின் எரிபொருள் விசாரனையில் விரைவில் நிருபிக்க வேண்டியது அவரின் கடமையே..!

மூலிகை எரிபொருளா..? ராமர் பிள்ளையா..?

சிலருக்கு இதில் கருத்து வேறுபாடுகள் தோன்றாலாம் அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது..!

மாற்றத்தை நோக்கி….

இந்த பதிவு போட உங்களுக்கு எவ்வளவு காசு கொடுத்தாங்க என்று கேட்க ஒரு கூட்டம் தயாராக இருக்கும் என்பதை யான் அறியேன் ஆகவே அதுபோன்றவர்களிடம் பணம் அதிகமாக இருந்தால் புயல் பாதித்த கிராமங்களுக்கு சென்று உதவிடுங்கள்..!

இதுவே உங்களின் கருத்தும் என்றால் பகிருங்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.