யாரோ எழுதியது அனைத்தும் நிதர்சனம் என்பதால் நானும் இங்கு பகிர்கிறேன்..!

0 388

ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு
நிச்சயமாக அழுகை ஒரு மருந்தாக இருக்கும்

நாளை என்பதே நமக்கு உறுதியில்லை…நாளும் அது புரிவதில்லை

🐝பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட பைத்தியகாரனா எதோ ஒரு நினைவோட வாழ்ந்துட்டு போய்டலாம்.

🐝இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்..ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை…!

🐝நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் …

🐝நரகம் என்னவோ இந்த வாழ்க்கையை விட வலித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது ….

🐝நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட …,

இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ….

🐝வாழும் நாட்களில் சந்தோஷத்தையும்,

மனஅமைதியையும் தேடுங்கள் …

மனிதனுடைய வாழ்நாள் தேவைகள்,

ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை

🐝இனி எதற்கும் “ஏன்” என கேள்வி கேக்காதே என்று சொன்னால்.அதற்கும்..”ஏன்” என்று தான் கேட்பாள் இந்த பெண் .

🐝அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே.இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்?

🐝சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ..15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.

🐝🐝கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!

🐝வேலை இல்லாதவனின் பகலும்,

நோயாளியின் இரவும் மிக நீளமானவை.

🐝🐝வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்… அன்பை அதிகமாகவும், கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்…

🐝🐝மனக்காயங்களுக்கான மருந்தை கண்டுபிடித்தால்..அவன் தான் உலகின்

பெரிய பணக்காரன் ஆவான் …

🐝�எத்தனை காலம் கடந்தால் என்ன…. சில நினைவுகளுக்கு நரை விழுவதே இல்லை…..

🐝இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில்,

வாழ் நாட்கள் போதாது ….ஏனெனில் …

இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம் …

🌴�பூனையை விட சிங்கம் வலிமையானது என்று

எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.

🐝தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான்

குற்றங்களுக்கு காரணம்!

🐝�சிரித்துக்_கொண்டே உன்னோடிருந்து

உனை_சீரழிக்கும் துரோகியை_விட …

முறைத்துக்_கொண்டே – உன் முன்னிருக்கும்

எதிரி_மேலானவன் ! ஷ…ரு🐝🐝

🐝அவ்வளவுஎளிதாக யாரிடமும் இருந்து

பிரிந்து விட இயலவில்லை..பிரிவு என்ற பெயரில் கொஞ்சம் ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது

🐝உனக்காக… தன் மீதான நியாயமான வாதத்தைக்கூட நிறுத்திக் கொள்ளும் பெண் கிடைத்தால் ஒருபோதும் இழந்து விடாதே..

🐝அலைகளில் கால்களை நனைக்கும் சுகம்,

கப்பலில் கடல் நடுவில் பயணப்படும்போது

கிடைப்பதில்லை…

🐝�பேரின்பம் வேண்டாம்..சிறுசிறு

சந்தோஷங்கள் போதும் வாழ்வை அனுபவிக்க…

🐝நூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதை

விட நம் காதுகளை மூடிக்கொள்வது

மிகச் சிறந்தது……

🐝🐝வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்கிறவங்க அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்..

🌹☘புன்னகை பிரச்சினைகள் “வருவதை தள்ளி போடும்..!!மெளனம் “பிரச்சினைகளே வராமல் தடுக்கும்..!எல்லா “பிரச்சினைகளுக் கும் இந்த வாய் காரணம்..!!!

🌴🌱அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்.உணர்ச்சி உள்ள மனிதனையும்.

அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க முடியாது…..

🌴🌷வாழ்வோடு போராடிச் சாவதிலும்

சாவோடு போராடி வாழ்வதிலுமே…

வாழ்க்கை முடிந்துவிடுகிறது…!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.