முதியவர்களைக் கொன்று எலும்புகள் கடத்தப்படுவது உண்மையா..? அதன் பின்னனி ரகசியம் என்ன..?
எலும்பு தின்னிகள்!!
முதியவர்களைக் கொன்று எலும்புகள் கடத்தப்படுவது உண்மையா? 1985 வரை இந்தியா விலிருந்துதான் உலக ஆய்வகங்களுக்கு (மருத்துவத்துறை உள்ளிட்ட) எலும்புக்கூடுகள் அனுப்பிவைக்கப் பட்டிருக்கின்றன. இன்னும் மேற்குவங்கத்தில் புதைத்த பிணங்களைத் தோண்டியெடுத்து ஹைட்ரொகுளோரிக் அமிலம், சோடா உப்புகள் உள்ளிட்ட வன் வேதிப்பொருள்கள் கொண்டு சதைகளைக் கரைத்து எலும்பை மட்டும் எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் கும்பல் ஒன்று இயங்குகிறது என்று செய்திகள் சொல்கின்றன. எலும்பை எரித்துக் கிடைக்கும் சாம்பலில் இருந்து கிடைக்கும் சுண்ணாம்புப் பாஸ்பேட்டுகள் உரத்தொழிற்சாலைகளுக்குப் பயன்படுகின்றன. வேறு பயன்பாடுகள் இருப்பதாகவோ அல்லது இதை வெளிநாட்டில் பணம் கொடுத்து வாங்குகிறார்கள் என்பதையோ நம்ப முடியவில்லை. ஆனாலும் வேறுகாரணங்கள் இருக்கலாம். எலும்பை எரித்தச் சாம்பலை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்களா அல்லது எலும்புக்கூட்டையே அனுப்புகிறார்களா என்று தெரியவில்லை. ஆயினும் செயின்ட் ஜோசப் பாதிரிமார் செய்யும் திரைமறைவு அட்டூழிய வேலைகள் பற்றி ஏன் ஊடகங்கள் வாய்திறக்கவே மறுக்கின்றன என்றுதான் தெரியவில்லை. வழியிலே சத்தமிட்ட பெரியவர் யார்?? அவர் ஏன் அவ்வாறு காப்பாற்றச் சொல்லி ஓலமிடவேண்டும்? காய்கறி வண்டிக்குள் மூதாட்டியின் பிணத்தை ஏற்றிக்கொண்டுவந்த ஓட்டுநர் யார்? எப்படி ஏற்றுவது பிணமென்று தெரியாமல் வண்டியை இயக்கியிருப்பார்?? இது பத்தோடு பதினொன்றாக போய்விட்டால் இதுவரை காணாமல் போன பெரியவர்களின் நிலை??