பொழுதுபோக்கு ஊடகமான இந்த FB -ல மொக்க போடறதையே முழுநேர பொழப்பா வச்சிருக்கவங்க தான் அதிகம் ,ஆன் /பெண்
படித்தவர்/படிக்காதவர் ,இளைஞர்கள் /வயதுமுதிர்ந்தோர்ன்னு எந்த பேதமும் இல்லாம
எல்லாரும் ஏதோ ஒரு சிலாகிப்பில் இதில் மூழ்கி தங்கள் நேரத்தை மட்டும்மல்ல ,பணம் உயிர் .வாழ்க்கை என எல்லாவற்றையும் தொலைக்கின்றனர் ,
நீங்கள் பார்க்கின்ற id ஆனா /பெண்ணா என்பதை உறுதி செய்ய இங்கு எந்த ஆதார் அட்டையும் இல்லை ,அவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்பதற்கும் அந்த நபர் கொடுத்துள்ள தகவல்களும் உங்களுடன் சாட்டில் பேசுகின்ற வார்த்தைகள் எல்லாம் உண்மை என்பதற்கு எந்த ISO சான்றிதழும் இணைக்க படவில்லை
நீங்கள் நினைப்பதற்கும் சிந்திப்பதற்கும் அதிகமான குற்றங்களும் உங்களுக்கு தெரியாமல் பின்னப்பட்டுள்ள வலை தான் இந்த FB தொடர்ந்து எவ்வளவு சொன்னாலும் முன்பின் அறிமுகமில்லாத id உடன் பேசாதீர்கள்
உங்களை பற்றிய முழுத்தகவல்களை தராதீர்கள்..!
அவர்களை நேரிடையாக சந்திப்பதை தவிருங்கள் ,முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை வீட்டிற்கு அழைக்காதீர்கள் ,பணம் கொடுக்கல் வாங்கல் செய்யாதீர்கள் ,inbox- இதில் ஒருவருடன் பேசுவதற்கும் முன் 1000-முறை யோசியுங்கள்
ஒரே ஒரு ஹாய் என்ற வார்த்தையில் தொடங்குகிறது அத்தனை ஆபத்தும் ,உங்களை பாதுகாத்துக்கொள்வது உங்கள கையில் உள்ளது
முகநூலினால் பல அசம்பாவித சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரிகிறது ஆகவே உங்கள் நலனுக்காவே இப்பதிவு..!
பணம் கற்பு உயிர்பலிகள் ஏராளமாக களவாடப்படுகிறது முகநூல் உறவுகளால் கவனமுடம் கையாளுங்கள்…!
பதிவு: Daiss