மணி பிளான்ட் (பண செடி) இதை வீட்டில் வளர்ப்பதால் எப்படி வீட்டில் பணம் சேரும் விளக்கம் இதோ..!

0 1,901

மணி பிளான்ட் பற்றிய தகவல்கள்

சாதாரணமாக இவை வீடுகளில் அழகுக்காக வளர்க்க படுகின்றன. அதாவது இவற்றில் இரண்டு வகைகள் உண்டு.

கரும் பச்சை நிற இலைகள் மற்றும் படத்தில் உள்ளதுபோல் வெளிர் பச்சை. இரண்டாவது வகை தான் அதிகம் விரும்பி வளர்க்க படுகின்றன .

இவை மிளகு கொடியை போன்று படர்ந்து அதாவது சுவரில் அவற்றின் கணுக்களில் தோன்றும் வேர்கள் மூலம் பற்றி மொட்டை மாடி வரை வந்து விடும்

அரை அடி நீள நுனி கொடியை கிள்ளி சாதாரண தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தில் வைத்து விட்டாலே பத்து நாட்களில் வெள்ளை நிற வேர்கள் தோன்றும்.

இவற்றிற்கு தண்ணீரில் உள்ள சத்துக்களே போதுமானது. அதேசமயம் சூரிய ஒளி இல்லாமலே வீட்டின் உட்புற அறைக்குள் கூட வளரும். ஆனால் இலைகள் சிறிய அளவில் மட்டுமே இருக்கும்.

இவற்றை மண்ணில் நடும்போது நல்ல கணமான தண்டுகள் உருவாகும். அதேசமயம் இவற்றின் இலைகள் ஒரு ஆள் சாப்பாடு உண்ணும் அளவில் வாழை இலை போன்று பயன்படும் .

இவை கிராமங்களை காட்டிலும் நகரங்களில் அதிகம் வளர்க்க படுகின்றன. காரணம் இவற்றை வீட்டில் வளர்ப்பதால் பணம் சேரும் என்ற கருத்து பரவலாக இருக்கிறது.

ஆனால் உண்மை என்னவென்றால் சூரிய ஒளி இல்லாமலே ஆக்சிஜன் ஐ வெளியிடும் தன்மை கொண்டது. இதனால் பல நோய்கள் தடுக்க படுகின்றன. இதனால் மருத்துவ மனைக்கு பணம் செலவிட வேண்டியது இல்லை.

இதனால் தானாகவே பணம் சேமிக்க படுவதால் இதற்கு மணி பிளாண்ட் என்று பெயர்.

சிலர் இவற்றை மற்றவர் வீட்டில் இருந்து அவர்களுக்கு தெரியாமல் பறித்து கொண்டு வந்து வீட்டில் வளர்த்தால் அதிக பணம் சேரும் என்று நினைக்கின்றனர் . இது தவறான கருத்து.

உழைக்காமல் பணம் யாருக்கும் தானாக கிடைக்காது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.