போலி செய்திகளையும் வதந்திகளையும் விரட்டி அடித்து மிரள வைக்கும் ஒரு ஒரு குருப்..!

0 310

இரண்டு ஆண்டுகளாக சமூகவலைதளத்தில் பரவி வரும் போலி செய்திகளையும் வதந்திகளையும் கண்டறிந்து அதன் உண்மை தன்மையை பதிவுகளாக ஆதாரத்துடன் வெளியிடுகின்றனர்..!

நாங்கள் அவர்களை பின் தொடர்ந்தவரை அதிகம் பரப்பப்பட்ட புரளிகள் என்னவென்றால் மத அரசியல் அதாவது ஓரு மதக்காரன் மற்ற மதக்காரனை இழிவுபடுத்துவதும் தன் மதம் உயர்ந்தது என காட்டிக்கொள்ள பல கட்டுக்கதையும் உண்மை போலவே பதிவிடுவதுமே இவ்வகை புரளிகளை பறப்புவர்களின் மனநிலை..!

அடுத்தபடியாக ஒரு கட்சியை சார்ந்த நபர்கள் மாற்று கட்சியினர் மீது வன்மங்களை தினித்து பல பொய் செய்திகளை திணித்து பரப்பி சுகம் காணுபவர்கள்..!

இவர்கள் சமூகவலைதளத்தில் வந்து புரளிகளையும் உண்மையும் கண்டறிய தொடங்கிய பின் இவர்களையுமே வைத்து பல புரளிகளையும் வதந்திகளையும் ஒரு குழு பரப்பியது என்பது குறிப்பிட தக்கது..!

சமூக வலைதளத்தை சமூக நலனுக்காக பயன்படுத்துவதாக நினைத்து பலரும் உண்மை அறியாமல் பல செய்திகளை உண்மை என்றே பகிர்கின்றீர்கள் ஆனால் இதனால் பல படுகொலைகளும் அறங்கேறியுள்ளது..!

கடந்த இரண்டு மாதம் முன்பு தமிழகம் முழுவதும் குழந்தை கடத்தல் பற்றிய வதந்திகள் பரவியது இதனால் பல கிராம மக்கள் பலரையும் சந்தேகபட்டு அடித்து துண்புறுத்தினார்கள் சிலரை கொலையும் செய்தார்கள் என்பது குறிப்பிட தக்கது..!

ஐயன் கார்த்திகேயன்,விக்னேஷ் காலிதாசனம் இருவரும் you turn என்ற முகநூல் பக்கத்தையும் இணையத்தையும் இயக்கி வருகின்றனர்..!

முகநூல் பக்கத்தில் மீம்ஸ் மூலமாக புரளிகளை விளக்குவதோடு இல்லாமால் இணையத்தில் முழு ஆதார கட்டுரைகளையும் வெளியிடுவார்கள்..!

ஆகவே சமூக வலைதளத்தில் வரும் கருத்துக்கள் அனைத்தும் உண்மை என்று நினைத்து பகிராதீர்கள்.உண்மை தன்மையை அறிந்த பிறகு பகிருங்கள்..!

போலி செய்திகளையும் புரளிகளையும் பரப்புவர்களை நாம் தடைசெய்ய முடியாது முடிந்த அளவு நாம் கவனமாக இருப்போம்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.