பசிக்கு செய்வதறியாமல் மனநலம் பாதிக்கபட்ட ஒருவர் அரிசி எடுத்துவிட்டார்..!

0 173

“தனியொருவனுக்கு உணவில்லையெனின்
செகத்தினை அழித்திடுவோம்” என்றான் பாரதி.

ஆனால் இவர்கள் பசித்தவனை அல்லவா கொன்று அழித்திருக்கிறார்கள்??ப

என்னே கொடுமை!

கேரளாவில் அட்டப்பாடி என்ற இடத்தில் மளிகை கடையில் அரிசி, உப்பு போன்ற பொருட்கள் திருடியதாக மது என்ற மனநலம் பாதிக்கப்பட்ட ஆதி வாசி இளைஞரை அப்பகுதி மக்கள் சிலர் அடித்து கொன்று இருக்கின்றனர்.

அதை விட கொடுமை அப்படி கொல்ல முன்பு அடிக்கும் பொழுது அவரோடு இந்த இரக்கமற்ற இளைஞர்கள் ‘செல்பி’ புகைப்படம் எடுத்து இணையத்திலும் பகிர்ந்திருக்கின்றனர்.

இரக்கமற்ற வக்கிர சிந்தையில் இது போன்ற செயல்களை செய்தவர்களை இந்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கின்றது.

அப்பாவி மக்களின் இது போன்ற படுகொலைகள், மரணங்களை பற்றி இந்திய அரசு போன்ற அரசுகள் கண்டு கொள்ளாமல் இருப்பதால் தான் இது போன்ற கொடும் செயல்கள் அந்த நாடுகளில் நிகழ்கின்றன.

மனிதன் மனிதனாக வாழாவிட்டாலும் பரவாயில்லை. சகமனிதனை கொன்று மகிழும் இழி பிறப்பாக வாழாது இருந்தால் போதாதா?

பசிக்கு திருடியவனை கொல்கிறார்கள்…பண முதலைகளை தப்ப விட்டு வைக்கிறார்கள்.

இதற்குள் மாந்த நேயம் பற்றியும் விண்வெளிக்கு ரொக்கட் விடுவது பற்றியும் வாய் கிழிய பேசுகிறது டிஜிட்டல் இந்தியா

மரணங்கள் மனிதர்களுக்கு மட்டுமா? மனிதத்திற்குமே!

மனிதம் செத்த பூமி மனிதர்கள் வாழும் நாடு அல்ல! சுடுகாட்டுக்கு சமமானது!

இழி மாந்தர் கொடும் செயலை வன்மையாக கண்டிப்போம்!

சோலார் பேனட் ஊழல் செய்த சரிதா நாயரை கொண்டாடுரானுங்க
சோறு திருடுன மதுவை அடிச்சு கொல்லுறானுக

பாலியல் தொல்லை கொடுத்த திலிப்பையும் கொண்டாடுறானுக
பசிக்குதுனு திருடுனா கொண்ணுடுரானுங்க
கேடுகெட்ட மனித ஜென்மங்களே

You might also like

Leave A Reply

Your email address will not be published.