நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்பட்டதா? கை மாற்றப்பட்டதா?

0 546

நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுவதாக தனியார் நிறுவனம் திடீர் என்று அறிவித்துள்ளதாக செய்தி வருகிறது.உண்மையிலே என்ன நடக்கிறது. .

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்த திட்டத்திற்காக நல்லாண்டார்கொல்லை, வடகாடு, கருக்காகுறிச்சி, வானக் கன்காடு, கோட்டைக்காடு ஆகிய 5 இடங்களில் இயற்கை எரிவாயு எடுக்க ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டன. மேலும் நெடுவாசலிலும் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. இந்த இடங்களில் அதிகாரிகள் ஆய்வு பணிகளையும் நடத்தி வந்தார்கள்.

இந்த திட்டத்தை செயல்படுத்தினால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். வரும் காலங்களில் குடிநீர் என்பதே கேள்விக் குறியாகி விடும் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்தினர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர், நடிகைகள், மாணவர் கள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து பேசினர்.

 

இந்த நிலையில் மத்திய, மாநில அமைச்சர்கள் இந்த திட்டம் கொண்டு வரப்படமாட்டாது என்று போராட்ட பந்தலுக்கே வந்து உறுதி அளித்தனர். அதனை ஏற்று 22 நாட்கள் நடைபெற்ற முதல்கட்ட போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

 

இதற்கிடையே பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, எரிவாயு எடுக்க மத்திய அரசு, ஜெம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு கையெழுத்து போட்டது. இதனை அறிந்த பொதுமக்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் 12-ந்தேதி 2-ம் கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் 174 நாட்கள் வரை நீடித்தது.

 

இந்நிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி ஒரு வருடம் கடந்து விட்டதாலும், பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாகவும் நெடுவாசல் கிராமத்திற்குள் சென்று ஜெம் நிறுவனம் எந்த பணிகளும் செய்ய முடியாமல் தவித்தது.

 

இதுகுறித்து ஜெம் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஹரிபிரசாத் டெல்லியில் கூறும்போது, நெடுவாசல் திட்டம் செயல்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட நிலங்களை எங்கள் நிறுவன பெயருக்கு மாற்றி தரக்கோரி தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பலமுறை கடிதம் அனுப்பியும் பதில் இல்லை. ஜெம் நிறுவனம் என்பது லாப நோக்கம் கொண்ட வியாபார நிறுவனம் தான். ஆனால், ஒரு வருடத்துக்கு மேலாக சம்பந்தப்பட்ட நிலத்தை மாற்றி கொடுக்காததால் பணியை தொடங்க முடியாமல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, நெடுவாசல் திட்டத்தை கைவிடுவதாகவும், அதற்கு பதிலாக மாற்று இடம் வேண்டும் என்றும் மத்திய பெட்ரோலிய துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளோம் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் நெடுவாசல் நாடியம்மன் கோவில் திடலில் நேற்று கூடிய நெடுவாசல் மற்றும் சுற்று வட்டார கிராம விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

 

ஆனால்,நேற்று இந்தியாவிலே முதன்முதலாக பூமியிலிருந்து ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு நிலத்தை அதாவது எரிவாய் பாயிண்ட்டை ஏலம் விடும் முறை நடந்தது.இதில் உலக அளவிலும் இந்திய அளவிலும் எரிவாய் எடுக்கும் பெரிய பெரிய கார்பரேட் நிறுவனங்கள் கலந்துகொண்டு ஏலம் எடுத்தன.

 

குறிப்பாக, வேதாந்தா [ ஸ்டெர்லைட் கம்பெனி ] கலந்துகொண்டு அதிகபட்ச  எரிவாய் பாயிண்ட்டை ஏலத்திற்கு எடுத்தது.வேதாந்தா மட்டும் 55 ல் 40 எரிவாய் பாயிண்ட்டுகளை ஏலத்திற்கு எடுத்து இருக்கிறது.

இந்த ஏலம் கார்பரேட் கம்பெனிகளுக்கு அதாவது   முதலீட்டாளர்களுக்கு சாதகமானதாகக் கருதப்பட்டது.  அனைத்து வகையான ஹைட்ரோகார்பன்களுக்கும் மத்திய பாஜக அரசு  ஒற்றை உரிமத்தை வழங்கியது. எரிவாய்,மீத்தேன் ,பெட்ரோல் ,என எது கிடைத்தாலும் இவர்கள் எடுத்துக்கொள்ளலாம். இவற்றுக்கு தனித்தனியாக உரிமம் வாங்கவேண்டிய அவசியம் இல்லை. மற்றும்,மிக எளிமையான முறையில் மார்க்கெட்டிங் செய்யவும் அவர்கள் நினைத்த விலையில் சுதந்திரமாக விற்பதற்கும் விலை நிர்ணயத்துடனான எளிமையான வருவாய் பகிர்வு மாதிரிடன். இந்த ஏலம் நடந்து முடிந்தது

 

செவ்வாயன்று அரசாங்கம் நடத்திய இந்த ஏலம் முறை என்பது இதுவரை இல்லாத மிகப்பெரிய நகர எரிவாயு உரிமம் விற்பனை என்பது குறிப்பிடத்தக்கது   174 மாவட்டங்களை உள்ளடக்கிய 86 புவியியல் பகுதிகள் வழங்கப்பட்டன. இந்தியாவின் மக்கள்தொகையில் 29 சதவிகிதம் மற்றும் புவியியல் பகுதியின் 24 சதவிகிதம் கொண்டதாக இது உள்ளடங்கி உள்ளது  ஆக, தமிழ்நாட்டில் .ஒரு ஜெம் நிறுவனம் போயி  நாசகார ஸ்டெர்லைட் கம்பெனி வந்துவிட்டது.தமிழ் பத்திரிகைகள் இது குறித்து இன்னும் செய்தி வெளியிடவில்லை.மாறாக அப்பாவி கிராமத்துக்காரர்கள் வெடிபோட்டு கொண்டாடுகிறார்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.