குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற ஆரோக்கியமான கீரை பருப்புக்கீரை. இது ரத்தத்தை சுத்தப்படுத்தி நீண்ட கால நோய்களின் தாக்கத்தைக் குறைக்கக்கூடியது. பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்வது.
பருப்புக் கீரையுடன் பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிடுவது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்ற உதவும். அடிக்கடி பருப்புக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு உடல் சூடு தணியும். மலச்சிக்கல் நீங்கும்.
வெயில் காலத்தில் உண்பதற்கு ஏற்ற கீரை இது. பருப்புக் கீரை மசியலுடன் நீராகாரம் சேர்த்து சாப்பிட்டு வர வெயில் காலத்தில் ஏற்படுகிற உடல் சூடு நீர்க்கடுப்பு வியர்க்குரு வேனல்கட்டிகள் போன்றவை தவிர்க்கப்படும். அதே போல வெயில் காலத்தில் ஏற்படுகின்ற அம்மை மற்றும் அக்கி பிரச்சனைகளுக்கும் பருப்புக் கீரையை மருந்தாக பயன்படுத்துகிறார்கள். பருப்புக் கீரையை நன்கு அரைத்து அக்கி வந்த இடங்களில் மேல்பூச்சாகத் தடவி வந்தால், கொப்புலங்கள் மறைந்து உடல் குளுமையடையும்.
பருப்புக் கீரையில் உள்ள ஆக்சாலிக் அமிலம் சிலருக்கு சிறுநீரகக் கற்கள் உருவாகக் காரணமாகலாம். எனவே சிறுநீரகக் கல் மற்றும் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பருப்புக் கீரையைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.
ஒமேகா 3 உள்ள அற்புதக் கீரை பருப்புக் கீரை. கால்சியம் சத்து குறைவாக உள்ளவர்கள் பருப்புக் கீரையைப் பயன்படுத்தினால் எளிதில் கால்சியம் கிடைக்கும். மலச்சிக்கலைப் போக்குகிறது, குடற்புழுக்களை அகற்றுகிறது. இரைப்பையில் மிகுதியாக சுரக்கும் அமிலம் காரணமாக ஏற்படும் நெஞ்செரிச்சலை போக்குகிறது!
பித்தம் அதிகம் உள்ளவர்கள். அடிக்கடி தலைசுற்றல் உள்ளவர்களுக்கு ஏற்றது.
இந்தியாவில் இயற்கையாக வளர்கிறது. இதன் இலைகள் மற்றும் விதைகளுக்காக 4250 மீ உயரம் வரை உள்ள இடங்களில் வளர்க்கப்படுகிறது. தான்ய பயிர் மற்றும் கீரை வகையாக மேற்கு இமாலய பகுதிகளில் பயிரிடப்படுகிறது.
வளரியல்பு :
மணமற்ற குறுஞ்செடி, 30-90 செ.மீ உயரம் வளரக்கூடியது. இலைகள் நீண்ட காம்புடையவை. மடல் மெல்லியது. மலர்கள் இருபாலின. கணுக்களில் நெறுங்கியவை, விதைகள் பக்க வளர்ச்சியுடையவை.
மருத்துவப் பயன்கள் :
இலைகளும், விதைகளும் சத்துப் பொருள் கொண்டவை. கீரையாக உட்கொள்ளப்படுகிறது. இலைச்சாறு அல்லது கசாயம் வயிற்றுப் புழுக்களுக்கு எதிரானது. மலமிளக்கி, கல்லீரல் நோய்கள் மற்றும் கணையத்தின் வீக்கம் தீர்க்க விதைகள் பயன்படுகின்றன.
வெயிற் காலத்தில் பூமி சூடாவது போல மனித உடலும் சூடாக இருக்கும். இக்காலத்தில் திடீரென மழை பெய்தால் பூமியில் மேல்பகுதியில் புழுக்கம் தோன்றுவது போல உடலிலும் புழுக்கம் தோன்றும்.
இதனால் பலவீனமடைந்த உடலில் அம்மை, அக்கி, போன்ற நோய்கள் தோன்றும் என்பது சித்த மருத்துவ கருத்து. அக்கி, அம்மை போன்ற நோய்கள் வைரஸ் கிருமிகளின் தாக்குதலால் உண்டாவதாகும்.
அக்கி வந்தவர்களுக்கு கிராமங்களில் காவிக்கல்லை நீரில் அல்லது பாலில் பாதிக்கப்பட்ட இடங்களில் குழைந்து பூசுவது வழக்கமாக காணப்படுகிறது.
கிராமத்திலுள்ள சில முதியவர்கள் இவ்வாறு அக்கி கண்டவர்களுக்கு காவிக்கல்லை பூசி வருவதை சேவையாக செய்கின்றனர். அக்கி கண்ட இடங்களில் கசிவு பிறருக்கு பட்டால் அக்கி பரவும் என்று கருதப்படுவதால் இதனை தொடாமல் அக்கிக்கு எதிர்பு சக்தி மிகுந்த பெரியவர்கள் மட்டுமே இதனை தொட்டு சிகிச்சை அளித்தனர். இவ்வாறு காவிக்கல்லை பூசுவதால் அக்கி பெரிதாகாமல் இருக்குமே தவிர எரிச்சல் உடனே குறையாது.
எரிச்சலும் உடனே குறையவேண்டும்! அக்கியும் உடனே குணமாக வேண்டு
ஆற்றல் : 27 கிலோ கலோரிகள்
ஈரப்பதம் : 90 கிராம்
புரதம் : 2 கிராம்
கொழுப்பு : 1 கிராம்
தாதுச்சத்து : 2 கிராம்
நார்ச்சத்து : 1 கிராம்
கார்போஹைட்ரேட் : 3 கிராம்
கால்சியம் : 111 மி.கி.
பாஸ்பரஸ் : 45 மி.கி.
இரும்புச்சத்து : 15 மி.கி.