நிலத்தடி நீரை கண்டுபிடிக்கும் முறைகள்..! உண்மையா..? ஏமாற்று வேலையா..?

1 1,190

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக…” என்பது பிரபலமான ஒரு பழமொழி. இப்போதெல்லாம் யாரும் கிணறு வெட்டுவதே இல்லை.

ஒரு ஃபோன் செய்தால் போதும் ராட்சத லாரி ஒன்று விடிய விடிய ‘கொர்…’ என்ற சப்தம் எழுப்பியபடி பூமியை துளையிட்டு, விடிவதற்குள் ஆழ்துளைக் கிணற்றினை உருவாக்கிவிடும்.

அதில் தண்ணீர் கிடைக்கிறதா, இல்லையா என்பது வேறு பிரச்சனை. ஆனால், கிணறு ரெடி.

‘நிலத்தடி நீர் பற்றாக்குறை’ என்ற புலம்பல்கள் தமிழ்நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளிலும் கேட்கிறது.

வீட்டிற்கு ஒன்றென நிலத்தடியிலிருந்து நீரை உறிஞ்சுவதற்காக போர்வெல் கிணறு வீற்றிருக்கிறது.

போர் போடுவதற்கு முன்னால் சம்பிரதாயமாக இப்போதும் சலம் பார்ப்பவர்கள் என்று அழைத்து வருவார்கள்

ஆழ்குழாய் கிணறு (போர்வெல்) போடுவதற்கு முன்பாக நிலத்தில் எத்தனை அடியின் கீழ் தண்ணீர் இருக்கின்றது என்பதை கண்டுபிடிக்க பிரத்தியேகமாக சிலரை அழைப்பதுண்டு.

• இவர்கள் கையில் எலுமிச்சை பழத்தை எடுத்து அதை பூஜை செய்து தரையில் உருட்டிவிட்டு குத்துமதிப்பாக ஒரு இடத்தை காட்டுவார்கள்.

• சிலர் தேங்காயை பூஜை செய்து அதை காதில் வைத்து பிடித்துக்கொண்டு அந்த இடத்தை சுற்றி சுற்றி வருவார்கள். பின்னர் குத்துமதிப்பாக ஒரு இடத்தை காட்டடி இத்தனை அடியில் நிலத்தடி நீர் இங்கு இருக்கின்றது என்று சொல்லி அடையாளம் போடுவார்கள்.

• சிலர் கையில் வேப்பங்குச்சியை பிடித்து சுற்ற வைப்பார்கள். ஒரு குறிப்பிட்ட இடம் வரும்போது அந்த வேப்பங்குச்சி வேகமாக கையில் சுழலும். அதை வைத்து நிலத்தடி நீரை கண்டுபித்து இந்த இடத்தில் போர்வெல் போட்டால் இத்தனை அடியில் தண்ணீர் இருக்கும் என்று சொல்லுவார்கள்.

. சிலர் மெக்கர் என்று மின்னனு சாதனங்களை பயன்படுத்தி நீலத்தடி நீரை பார்ப்பதுண்டு

இப்படி நிலத்தடி நீரைக்கண்டுபிடிப்பதற்கு பலவிதமாக வித்தைகளை கைக்கொண்டு குத்துமதிப்பாக ஒரு இடத்தை அடையாளம் காட்டுவது சிலகாலமாக நடைபெற்றுக்கொண்டு வருகின்றது. இதற்கு கூலியாக 500 ரூபாயோமுதல் 5ஆயிரம் ரூபாயோ இந்த ஸ்பெஷலிஸ்டுகள் வசூலிப்பதுண்டு. இவர்கள் சொல்கின்ற இடத்தில் போர்வெல் போட்டால் சில இடங்களில் தண்ணீர் வரும் சில இடங்களில் தண்ணீர் வரவே வராது.

இன்றைக்கு பலரும் நிலத்தடி நீரை கண்டுபிடிக்க இப்படிப்பட்ட நபர்களை வரவழைக்கின்றனர். சிலர், ஒருபடி மேலே சென்று தீர்க்கதரிசிகள் என்று சொல்லி குறிசொல்லித்திரிகின்ற நபர்களை நிலத்தடி நீரைக்கண்டுபிடிக்க அழைத்து வருகின்றனர்.

நானும்,எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர், இப்படிதான் தீர்க்கதரிசி என்ற அடைமொழியல் குறி சொல்லிக்கொண்டு திரிகின்ற மூன்று பேரை நிலத்தடி நீரை கண்டுபிடிக்க அழைத்தோம். இங்கும் அங்கும் ஓடித்திரிந்து ஒரு இடத்தில் குத்துமதிப்பாக அடையாளத்தை போட்டுவிட்டு 60 அடியில் தண்ணீர் இருக்கின்றது 100 அடி போர்வெல் போடுங்கள் என்று சொல்லிவிட்டு காசை கவரில் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.

போர்வெல் போட ஆரம்பித்து 40 அடி 50 அடி 60 அடி என்று போய்க்கொண்டே இருந்நதது. தீர்க்கதரிசி சொன்ன இடத்தில் தண்ணீர் வரவே இல்லை. 100 அடி 150 அடி தாண்டி சென்றும் புகையாக புளுதிதான் வந்ததேயொழிய தண்ணீர் வரவே இல்லை. கடையியாக நொந்துபோய் 200 அடிவரையில் போர்வெல் போட்டுவிட்டு நிறுத்திவிட்டனர். ஆயிரக்கணக்கில் பண நஷ்டம்.

பின்னர் அந்த தீர்க்கதரிசியிடம் போர்வெல்லில் தண்ணீர் வராத இந்த செய்தி தெரிவிக்கப்பட்டது. அதற்கு அவர்களின் தரப்பில் உங்களுக்கு ராசி இல்லை என்று கூறிவிடுவார்கள் ஆனால் கவரை மட்டும் திருப்பி கொடுக்கவில்லை.

இது இன்றளவும் நடந்துகொள்ளது, பல கிராமங்களில் பலரும் ஏமாற்றம் அடைகின்றனர்,

உண்மையாக உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா..?

நம்பிக்கை இருந்தால் எனது தோட்டத்திற்கு வந்து ஒரு ஆழ்துளை கிணறு அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன் நீர் வந்தால் பணம் தருகிறோம்..!

யாராவது தயாரா..?

You might also like
1 Comment
  1. Kathir says

    Avanga yarum namma veetukku vanthu bore podunganu sollalaiye nama thana thedi poi kutitu varom

Leave A Reply

Your email address will not be published.